என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
நீங்கள் தேடியது "மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்"
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் மாயமான சிலைகள் தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐகோர்ட் எச்சரித்துள்ளது. #MadrasHC #KapaleeswararTempleIdol
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவன நாதர் சன்னதியில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த சிலை தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்து அறநிலையத் துறையின் கடிதத்தை தாக்கல் செய்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஆவணங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு உத்தரவிட்டார்.
ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் புகார் நிரூபணமானால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர். #MadrasHC #KapaleeswararTempleIdol
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவன நாதர் சன்னதியில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த சிலை தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்து அறநிலையத் துறையின் கடிதத்தை தாக்கல் செய்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஆவணங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு உத்தரவிட்டார்.
ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் புகார் நிரூபணமானால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர். #MadrasHC #KapaleeswararTempleIdol
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பழமையான மயில் சிலை 14 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாக வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்று. பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் தேவார பாடல் பெற்ற தலம்.
மயில் உருவம் பெற்ற பார்வதி தேவி திருமயிலை தலத்தில் புன்னை மரத்தடியில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.
இதை உணர்த்தும் வகையில் புன்னைவன நாதர் சன்னதியில் மயில் வடிவிலான அம்பாள் அலகில் மலரை ஏந்தியபடி சிவனுக்கு பூஜை செய்யும் மிகப் பழமையான சிலை இருந்தது.
இந்த கோவிலில் 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அப்போது திருப்பணி நடந்த போது மயில்சிலை சேதமடைந்து விட்டதாக கூறி புதிய சிலையை நிறுவி இருக்கிறார்கள்.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ‘பழமையான மயில் சிலை மாயமாகி 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை புகார் கூட தெரிவிக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, கோர்ட்டுக்கு அறிக்கை கொடுப்பதற்காக அறநிலையத்துறை தகவல் திரட்டிய போது அலகில் மலருடன் கூடிய மயில் சிலைக்குப் பதிலாக அலகில் பாம்புடன் கூடிய மயில் சிலை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பழைய சிலை என்ன ஆனது என்பது குறித்த விபரங்கள் யாருக்கும் தெரியவில்லை.
2004-ல் கும்பாபிஷேகம் நடந்த போது பழமையான மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பழைய மயில் சிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.
அந்த சிலையை புதைத்து விட்டதாக கூறி இருக்கிறார்கள். ஆனால் உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை.
இதுபற்றி துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்ததும்அறிக்கை தயாரித்து ஆணையர் அலவலகத்தில் வழங்க இருப்பதாக கூறினார்கள்.
புராதன சிலை மாயமாகி இருப்பதும் அதுபற்றி எந்த தகவலும் இல்லாமல் இருப்பதும், கோவில் நிர்வாகம் மவுனமாக இருந்ததும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. முறையாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் எதிர் பார்க்கிறார்கள். #KapaleeshwararTemple
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்று. பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் தேவார பாடல் பெற்ற தலம்.
மயில் உருவம் பெற்ற பார்வதி தேவி திருமயிலை தலத்தில் புன்னை மரத்தடியில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.
இதை உணர்த்தும் வகையில் புன்னைவன நாதர் சன்னதியில் மயில் வடிவிலான அம்பாள் அலகில் மலரை ஏந்தியபடி சிவனுக்கு பூஜை செய்யும் மிகப் பழமையான சிலை இருந்தது.
இந்த கோவிலில் 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அப்போது திருப்பணி நடந்த போது மயில்சிலை சேதமடைந்து விட்டதாக கூறி புதிய சிலையை நிறுவி இருக்கிறார்கள்.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ‘பழமையான மயில் சிலை மாயமாகி 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை புகார் கூட தெரிவிக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, கோர்ட்டுக்கு அறிக்கை கொடுப்பதற்காக அறநிலையத்துறை தகவல் திரட்டிய போது அலகில் மலருடன் கூடிய மயில் சிலைக்குப் பதிலாக அலகில் பாம்புடன் கூடிய மயில் சிலை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பழைய சிலை என்ன ஆனது என்பது குறித்த விபரங்கள் யாருக்கும் தெரியவில்லை.
2004-ல் கும்பாபிஷேகம் நடந்த போது பழமையான மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பழைய மயில் சிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.
அந்த சிலையை புதைத்து விட்டதாக கூறி இருக்கிறார்கள். ஆனால் உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை.
இதுபற்றி துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்ததும்அறிக்கை தயாரித்து ஆணையர் அலவலகத்தில் வழங்க இருப்பதாக கூறினார்கள்.
புராதன சிலை மாயமாகி இருப்பதும் அதுபற்றி எந்த தகவலும் இல்லாமல் இருப்பதும், கோவில் நிர்வாகம் மவுனமாக இருந்ததும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. முறையாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் எதிர் பார்க்கிறார்கள். #KapaleeshwararTemple
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X