search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைபட்டா"

    • கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதல் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து செல்கின்றனர்.
    • இலங்கையனூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பம் வசித்து வருகின்றனர்

    ,கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதல் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலங்கையனூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பம் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் 35 ஆண்டுகளாக வீடு இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இது தொடர்பாக கிராம பொதுமக்கள் இலவச மனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்து உள்ள நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எங்கள் கிராமத்தில் மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

    • கடலூர் அருகே ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமளன்குளம் ஊராட்சியில் உள்ள ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பூமி பூஜையில் அடிக்கல் நாட்டு தொடங்கி வைத்தார். மேலும் அப்பகுதியில் வருவாய்த்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணையினையும் , ஒரு பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டாவினையும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையினை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் வழங்கினார் . மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ( வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×