என் மலர்
நீங்கள் தேடியது "Manipatta"
- கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதல் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து செல்கின்றனர்.
- இலங்கையனூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பம் வசித்து வருகின்றனர்
,கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதல் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலங்கையனூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பம் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் 35 ஆண்டுகளாக வீடு இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இது தொடர்பாக கிராம பொதுமக்கள் இலவச மனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்து உள்ள நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எங்கள் கிராமத்தில் மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
- இவர்களது மருமகள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் தங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்தனர்.
- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (வயது 65). இவருடைய மனைவி ராசாத்தி. இவர்களது மருமகள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் தங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்தனர். அதே ஊரில் அரசு தொலைக்காட்சி வைக்க ஒதுக்கப்பட்ட அறையில் 6 பேரும் குடியேறி 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாதுகாப்போர் நல சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கடலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
- இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமை தாங்கினார்.
கடலூர்:
கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் இலவச மனை பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் இன்று காலை நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கடலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
கடலூர் வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி நலத்துறையின் அறிவிப்புக்கிணங்க மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் தாசில்தார் அலுவலகத்தில் மனுஅளித்தனர் இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் வீரமணி, அரிநாராயணன், ரவி, ஜெயபால், சுந்தரபாண்டியன் கனகராஜ், அப்துல் ஹமீத், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனா..






