search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு  மாற்றுத்திறனாளிகள் மனைப்பாட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
    X

    தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்திய காட்சி.

    கடலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மனைப்பாட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

    • பாதுகாப்போர் நல சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கடலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
    • இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் இலவச மனை பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் இன்று காலை நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கடலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    கடலூர் வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி நலத்துறையின் அறிவிப்புக்கிணங்க மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் தாசில்தார் அலுவலகத்தில் மனுஅளித்தனர் இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் வீரமணி, அரிநாராயணன், ரவி, ஜெயபால், சுந்தரபாண்டியன் கனகராஜ், அப்துல் ஹமீத், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனா..

    Next Story
    ×