search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய குழு"

    • மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு வருகிறதா என்பதையும் தெரிந்து கொண்டார்.
    • 100 நாள் வேலை திட்டத்தின் பயன்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் வேலை வழங்கப்படுகிறது, ஒரு நாள் வேலைக்கான கூலி என்ன போன்றவை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றிய ஊராட்சிகளில் திருக்கடையூர், தலையுடையார் கோயில்பத்து, மற்றும் முடிதிருச்சம்பள் ஊராட்சியில் உள்ள வட்டார நாற்றங்கால் உற்பத்தி மையத்தை ஆய்வு செய்தனர். மழை நீர் சேகரிப்பு குறித்தும் கேட்டறிந்தனர்.

    இதில் மத்திய ஆய்வு குழு பொறுப்பு அலுவலரும், மத்திய ஜவுளித்துறை துணை செயலாளருமான சுக்லா, தொழில்நுட்ப விஞ்ஞானி ஸ்ரீ சௌஸ்ரீ பாபு பாலாசாஹிப் மற்றும் குழுவினர் 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் கலந்துரையாடினர்.

    அப்போது பொறுப்பு அலுவலர், 100 நாள் வேலை திட்டத்தின் பயன்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் வேலை வழங்கப்படுகிறது, ஒரு நாள் வேலைக்கான கூலி என்ன போன்றவை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு வருகிறதா என்பதையும் தெரிந்து கொண்டார். மேலும் நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்துவதற்கான சோதனை ஆய்வு செய்து காண்பிக்கப்பட்டது.

    இதனையடுத்து மத்திய குழுவினர் அந்த மையத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மரங்க் கன்றுகள் பூக்கள், பழங்கள், மூலிகை செடிகள் உள்ளிட்டவைகளின் நாற்றாங்களை பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள், மைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, தண்ணீர் ஊற்றினர். ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், உதவி திட்ட அலுவலர் பிரபாகர், செயற்பொறியாளர் பிரேம்குமார், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, குத்தாலம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், ஜனகர், தமிழ்ச்செல்வன் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஸ்ரீதர், ஊராட்சி செயலாளர் முருகவேல் மற்றும் அலுவலர்கள், மகளீர் சுயகுழுவினர் உள்ளிட்ட பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • டெல்லியில் இருந்து மம்தா ஷங்கர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பொருட்கள் வாங்க நின்றிருந்த பொதுமக்களிடம் இந்த கடையில் பொருட்கள் சரியாக விநியோகிக்கப்படுகிறதா? அளவுகள் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து கேட்டிருந்தனர்.

    மாமல்லபுரம்:

    தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த ரேஷன் பொருட்களை எந்தவித குறையும் இல்லாமல் அனைத்து பொது மக்களுக்கும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒரு சில ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் தரமானதாக இல்லை எனவும், எடை அளவு சரியாக இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் இருந்து மம்தா ஷங்கர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பொருட்கள் வாங்க நின்றிருந்த பொதுமக்களிடம் இந்த கடையில் பொருட்கள் சரியாக விநியோகிக்கப்படுகிறதா? அளவுகள் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து கேட்டிருந்தனர். பின்னர் கடை ஊழியர்களிடம் பொருட்களின் அளவு சரியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

    பின்னர் ரேஷன் பொருட்களை அடுக்கி வைத்திருந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அங்கே கீழே சிந்தி கிடந்த பொருட்களை பார்த்து இதை பொதுமக்களுக்கு வழங்க கூடாது எனவும், ரேஷன் கடையினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். அவர்களுடன் காஞ்சிபுரம் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட பதிவாளர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் மொத்த சேத மதிப்பு தோராயமாக ரூ.199 கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    வேலூர்

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ள சேத பாதிப்புகளை மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

    மத்திய நிதியமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையில் மத்திய நீர்வள ஆதார முகமையின் இயக்குநர் தங்கமணி மற்றும் பவ்யா பாண்டே ஆகியோருடன் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு மின் ஆளுமை நிர்வாக இணை இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் மழை வெள்ள சேத பாதிப்புகள் குறித்து கூறப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். 9 கால்நடைகள், 14 ஆயிரத்து 800 கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளன. மழைக்கால நிவாரண முகாம்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். 627 வீடுகள் பகுதியாகவும், 72 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் மொத்தம் 2.32 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தொடர் மழையால் 101 ஏரிகளில் 83 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

    அதேபோல், மாவட்டம் முழுவதும் 68 இடங்களில் 101.08 கி.மீ சாலைகள் சேதமடைந்துள்ளன. 16 தரைப்பாலங்கள், சிறுபாலங்கள், 30 ஏரி, குளங்கள், ஊரணிகள் சேமதடைந்துள்ளன. 9 மேல்நிலை குடிநீர் தொட்டிகள், 38 ஆழ்துளை கிணறுகள், 16,457 மீட்டர் தொலைவுக்கு குடிநீர் குழாய்கள், 18 திறந்தவெளி கிணறுகள் சேதமடைந்துள்ளன.

    மாவட்டத்தில் நெற்பயிர்களுடன் தோட்டக்கலை பயிர்கள் என மொத்தம் 606.95 ஹெக்டேர் அளவுக்கு சேதமடைந்துள்ளன.பாதிப்பு கணக்கெடுக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

    தொடர்ந்து நடந்து வருவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். வேலூர் மாவட்டத்தில் மொத்த சேத மதிப்பு தோராயமாக ரூ.199 கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகளால் வேளாண்மை துறையின் 2781 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 2050 ஹெக்டேர் வேளாண்மை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 382 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது.

    வேளாண்துறை சேதங்களுக்கு ரூ.3.29 கோடி. தோட்டக்கலை துறைக்கு ரூ.52 லட்சம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறைக்கு ரூ.11.8 கோடி, நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5.4 கோடி. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.5.38 கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.2.18 கோடி.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ரூ.1 கோடி. பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் மருத்துவ கட்டிடங்கள் ரூ.1 கோடியே 27 லட்சம், வருவாய்த்துறைக்கு ரூ.78 லட்சமும் என மொத்தமாக ரூ.29 கோடியே 44 லட்சம் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது என மத்திய குழுவிற்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

    ×