search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சள் நீர்"

    • தாராபுரம் அருகே உள்ள மடத்துப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாாியம்மன் கோவில் உள்ளது.
    • 10-ந்தேதி பொங்கல், முளைப்பாறி எடுத்துவருதல், மாவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது.

    திருப்பூர்:

    தாராபுரம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாமன் மகன் மீது மஞ்சள் நீரை ஊற்றி இளம்பெண்கள் விளையாடுவதால், அதிகமான பாசம் ஏற்படுவதாக நம்புகிறார்கள்.

    தாராபுரம் அருகே உள்ள மடத்துப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாாியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது.

    இதையடுத்து அன்று காலை புனித நீா் எடுத்து வரப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டது. 10-ந்தேதி பொங்கல், முளைப்பாறி எடுத்துவருதல், மாவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னா் 11-ந்தேதி காலை பாரம்பாிய நிகழ்ச்சியான மஞ்சள் நீா் விளையாட்டு நடைபெற்றது. அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் ஏற்கனவே தாங்கள் தயாா் செய்து வைத்து இருந்த மஞ்சள் நீரை தங்கள் மாமன் மகன் மற்றும் மாமன் மகள் மீது ஊற்றி விளையாடினா். இதனால் உறவு பலப்படும், நோய்கள் தீரும், மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    அதன்படி மாமா மகன் மீது அத்தை மகள்களும், அத்தை மகள் மீது மாமன் மகன்களும் ஒருவர் மீது மற்றொருவர் மஞ்சள் கலந்த நீரை ஊற்றி கொண்டாடினர். 

    ×