search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன் கோவில் திருவிழா"

    • பூச்சாட்டுகளுடன் திருவிழா தொடங்கியது.
    • பொங்கல் வைத்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி அடுத்து நம்பியூர் சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ அத்தனூர் அம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாட்டுகளுடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் அத்தனூர் அம்மன் கோவில் முன்பு அதிகாலை எருமை கிடாயினை வெளியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதைக்கண்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக புளியம்பட்டி, குட்டகம், மாதம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

    விழாவினை புளியம்பட்டி இளங்காளி கவுடர் மற்றும் பூசாரி கவுடர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நாளை இரவு கம்பம் நடப்பட்டு திருவிழாவானது தொடர்ந்து நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தாராபுரம் அருகே உள்ள மடத்துப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாாியம்மன் கோவில் உள்ளது.
    • 10-ந்தேதி பொங்கல், முளைப்பாறி எடுத்துவருதல், மாவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது.

    திருப்பூர்:

    தாராபுரம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாமன் மகன் மீது மஞ்சள் நீரை ஊற்றி இளம்பெண்கள் விளையாடுவதால், அதிகமான பாசம் ஏற்படுவதாக நம்புகிறார்கள்.

    தாராபுரம் அருகே உள்ள மடத்துப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாாியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது.

    இதையடுத்து அன்று காலை புனித நீா் எடுத்து வரப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டது. 10-ந்தேதி பொங்கல், முளைப்பாறி எடுத்துவருதல், மாவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னா் 11-ந்தேதி காலை பாரம்பாிய நிகழ்ச்சியான மஞ்சள் நீா் விளையாட்டு நடைபெற்றது. அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் ஏற்கனவே தாங்கள் தயாா் செய்து வைத்து இருந்த மஞ்சள் நீரை தங்கள் மாமன் மகன் மற்றும் மாமன் மகள் மீது ஊற்றி விளையாடினா். இதனால் உறவு பலப்படும், நோய்கள் தீரும், மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    அதன்படி மாமா மகன் மீது அத்தை மகள்களும், அத்தை மகள் மீது மாமன் மகன்களும் ஒருவர் மீது மற்றொருவர் மஞ்சள் கலந்த நீரை ஊற்றி கொண்டாடினர். 

    • விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.
    • ஏப்ரல் 18 முதல் அடுத்த மாதம் மே 5-ந் தேதி வரை நடைபெறும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஒன்றியம், பச்சாபாளையம் ஊராட்சி, கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கால்நடை சந்தை நடைபெறும். இந்த கால்நடை சந்தைக்கு ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள், கால்நடை சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.

    இந்த ஆண்டு 2023 ஏப்ரல் 18 முதல் அடுத்த மாதம் மே 5-ந் தேதி வரை நடைபெறும் கால்நடை சந்தை மற்றும் தற்காலிக கடைகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமம் ரூ. 79 ஆயிரத்து 700 க்கு ஏலம் விடப்பட்டது.

    • தேர்த்திருவிழாவுக்கு மார்ச் 28-ந் தேதி நோன்பு சாட்டப்பட்டது.
    • அம்பாள் ரிஷப வாகனத்தில், புஷ்ப அலங்காரத்துடன் வலம் வந்தார்.

    உடுமலை :

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திரு விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவி ழாவுக்கு மார்ச் 28-ந்தேதி நோன்பு சாட்டப்பட்டது. கடந்த 4ந்தேதி, கோவில் வளாகத்தில் திருக்கம்பம் நடப்பட்டது.நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.அதன்படி நேற்று முன் தினம் அம்பாள் ரிஷப வாகனத்தில், புஷ்ப அலங்காரத்துடன் வலம் வந்தார். இன்றுடன் பூவோடு எடுத்தல் நிறைவு பெறுகிறது. வருகிற 12-ந்தேதி மாவிளக்கு எடுத்த லும் மாலை 3மணிக்கு அம்மன் திருக்க ல்யாணம் நடைபெ றுகிறது.உடுமலை நகர வீதிகள் அனைத்தும் விழாக்கோலத்தில், காட்சியளிக்கிறது. மக்கள் உற்சாகத்துடன் நிகழ்ச்சி களில் பங்கேற்று வருகின்ற னர். 

    • மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.
    • கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 4-ந்் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 6-ந் தேதி வாஸ்து சாந்தி, கிராம சாந்தி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தேவாங்கர் சமூகத்தின் சார்பில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக தளி சாலை பூமாலை சந்து பகுதியிலுள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. கோவில் மண்டபத்தில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மஞ்சள் துணியா லான கொடி மாரியம்மன் உருவப்படத்துடன் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்றம் நிகழ்ச்சியை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் கொடி மரத்துக்கு முன்பு ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணியளவில் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கையில் பூவோடு ஏந்தி சன்னதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணியளவில் அம்மன் புஷ்ப அலங்காரத்துடன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. கோவிலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்ற அம்மன் திருவீதி உலாவின் போது வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுலவர் வெ.பி.சீனிவாசன், யூ.எஸ்.சஞ்சீவ் சுந்தரம், தேவாங்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஏ.சீனிவாசன், அறங்காவலர் கிருஷ்ணராஜ், வி.பி.எஸ்.ஆர்.பிரகாஷ், கொங்கு ரவி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்செங்கோட்டில் ஐப்பசி மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • அலங்கரிக்கபட்ட புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா வந்து அம்மன், மின்விளக்கு வெளிச்சத்தில் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் ஐப்பசி மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு பொங்கல் விழாவின்போது அலங்கரிக்கபட்ட புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா வந்து அம்மன், மின்விளக்கு வெளிச்சத்தில் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்.

    இந்த நிகழ்ச்சி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தெப்பக்குளத்தில் வறட்சியால் தண்ணீர் இல்லாத காரணத்தால் குளம் சீரமைப்பு பணிக்காக நிறுத்தபட்டது. தற்போது மழை காரணமாக தெப்பகுளத்தல் தண்ணீர் நிரம்பி உள்ளது.

    இதையடுத்து தெப்ப உற்சவம் மீண்டும் நடத்த வேண்டும் என ெபாதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை வைக்கபட்டதை அடுத்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் நகராட்சி சேர்மேன் நளினி, நகராட்சி ஆணையாளர் கணேசன், நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் குணசேகரன்,நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தமிழ்செல்வி, இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் சுரேஷ், சிவாச்சரியார்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோ சனைக்கூட்டதிற்கு பின்பு தெப்ப உற்சவம் நடைபெற அனுதி அளிக்கபட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்பு தெப்ப உற்சவம் நடைபெற அனுமதி கிடைக்க பெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தெப்பத்தேர் நிகழ்ச்சி நாளை ( வெள்ளிக்கிழமை) மாலை 4மணிக்கு தொடங்குகிறது.

    • யாகசாலை பூஜைகளும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு காப்பு கட்டுதலும், அக்கரைப்பட்டி முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

    தருமபுரி, 

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் 86-ம் ஆண்டு திருவிழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    பின்னர் யாகசாலை பூஜைகளும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றது.

    விழாவையொட்டி பக்தர்களுக்கு காப்பு கட்டுதலும், அக்கரைப்பட்டி முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து இடும்பன் ஊர்வலமும், சக்தி கரகம் அழைத்தலும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இன்று (புதன்கிழமை) மாரியம்மன், செல்லியம்மன் மற்றும் விருந்தாடியம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு 500 இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க, மாரியம்மன் பூத வாகனத்தில் உடன் வர விருந்தாடியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.

    தொடர்ந்து மாலை 3 மணிக்கு செல்லியம்மனுக்கு பொங்கல் வைத்தலும், 4 மணிக்கு செல்லியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு ஊர்வலமும் நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10-30 மணிக்கு மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் விழாவும், மாலை 6 மணிக்கு வாண வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க சிம்ம வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.

    வருகிற 24-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தருமபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து ரிஷப வாகனத்தில் மாரியம்மன் பந்தக்காட்சி ஊர்வலமும், தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • ஸ்ரீ காளியம்மன் ஊர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கொண்டாடுவது வழக்கம்.
    • பக்தர்கள் தீமித்து வேன்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் ஊர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கொண்டாடுவது வழக்கம்.

    அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களான அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

    அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக மாவிளக்கு எடுத்தல் , பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பூ கரகம் எடுத்தனர். பக்தர்கள் அம்மன் வேடம், காளிவேடம் அணிந்தும், என மேளதாளம் முழங்க ஸ்ரீஊர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ காளியம்மன் கோவில் வரை நடந்து சென்று பக்தர்கள் தீமித்து வேன்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் அம்மனுக்கு கோழி, கிடா ஆகியவற்றை பலியிடட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர் விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • விநாயகர் வழிபாடு, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    அரவேணு:

    கோத்தகிரி அருகே உள்ள குமரன் காலனி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அலகு குத்துதல் மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அலகு குத்தியும், பால்குடம் மற்றும் காவடி மற்றும் பறவைக்காவடி ஏந்தியும் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×