search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athanur Amman"

    • பூச்சாட்டுகளுடன் திருவிழா தொடங்கியது.
    • பொங்கல் வைத்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி அடுத்து நம்பியூர் சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ அத்தனூர் அம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாட்டுகளுடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் அத்தனூர் அம்மன் கோவில் முன்பு அதிகாலை எருமை கிடாயினை வெளியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதைக்கண்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக புளியம்பட்டி, குட்டகம், மாதம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

    விழாவினை புளியம்பட்டி இளங்காளி கவுடர் மற்றும் பூசாரி கவுடர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நாளை இரவு கம்பம் நடப்பட்டு திருவிழாவானது தொடர்ந்து நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ஆத்தனூர் அம்மன் மாரியம்மன் உடன் விநாயகர், கருப்பண்ணசாமி கன்னிமார் சாமி கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற உள்ளது.
    • அதைத் தொடர்ந்து மாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த குட்டகம் கிராமத்தில் புகழ்பெற்ற அத்தனூர் அம்மன் மாரியம்மன் கோவில் உள்ளது. புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதி மக்களுக்கு இந்த கோவில் குலதெய்வமாக உள்ளது.

    இந்த கோவிலில் ஆத்தனூர் அம்மன் மாரியம்மன் உடன் விநாயகர், கருப்பண்ணசாமி கன்னிமார் சாமி சிலைகள் உள்ளன. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக நடைபெற உள்ளது.

    அன்று காலை 8.45 மணி முதல் 9.45 மணிக்குள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது.

    அதைத் தொடர்ந்து மாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதில் ஊர் மக்கள் மாவிளக்கு முளைப்பாரி எடுத்து வந்து விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடி இன்று வாழவும் அம்மனை வழிபடுவார்கள். கும்பாபிஷே–கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

    ×