search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அத்தனூர் அம்மன் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    அத்தனூர் அம்மன் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • ஆத்தனூர் அம்மன் மாரியம்மன் உடன் விநாயகர், கருப்பண்ணசாமி கன்னிமார் சாமி கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற உள்ளது.
    • அதைத் தொடர்ந்து மாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த குட்டகம் கிராமத்தில் புகழ்பெற்ற அத்தனூர் அம்மன் மாரியம்மன் கோவில் உள்ளது. புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதி மக்களுக்கு இந்த கோவில் குலதெய்வமாக உள்ளது.

    இந்த கோவிலில் ஆத்தனூர் அம்மன் மாரியம்மன் உடன் விநாயகர், கருப்பண்ணசாமி கன்னிமார் சாமி சிலைகள் உள்ளன. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக நடைபெற உள்ளது.

    அன்று காலை 8.45 மணி முதல் 9.45 மணிக்குள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது.

    அதைத் தொடர்ந்து மாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதில் ஊர் மக்கள் மாவிளக்கு முளைப்பாரி எடுத்து வந்து விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடி இன்று வாழவும் அம்மனை வழிபடுவார்கள். கும்பாபிஷே–கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×