search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோதிஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற காட்சி.
    X
    ஜோதிஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற காட்சி.

    ஜோதிஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா

    ஜோதிஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.
    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதிஹள்ளி கிராமத்தில் ஸ்ரீமாரியம்மன் கோவில்  திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.  ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கொண்டாடி வருகின்றனர்.

     திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று  அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.
    இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு தட்டுவரிசை எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து பொங்கல் வைத்து ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர். 

    கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு  அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.  இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர், மந்திரி கவு ண்டர், நாட்டு கவுண்டர், ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×