search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yellow water"

    • தாராபுரம் அருகே உள்ள மடத்துப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாாியம்மன் கோவில் உள்ளது.
    • 10-ந்தேதி பொங்கல், முளைப்பாறி எடுத்துவருதல், மாவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது.

    திருப்பூர்:

    தாராபுரம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாமன் மகன் மீது மஞ்சள் நீரை ஊற்றி இளம்பெண்கள் விளையாடுவதால், அதிகமான பாசம் ஏற்படுவதாக நம்புகிறார்கள்.

    தாராபுரம் அருகே உள்ள மடத்துப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாாியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது.

    இதையடுத்து அன்று காலை புனித நீா் எடுத்து வரப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டது. 10-ந்தேதி பொங்கல், முளைப்பாறி எடுத்துவருதல், மாவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னா் 11-ந்தேதி காலை பாரம்பாிய நிகழ்ச்சியான மஞ்சள் நீா் விளையாட்டு நடைபெற்றது. அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் ஏற்கனவே தாங்கள் தயாா் செய்து வைத்து இருந்த மஞ்சள் நீரை தங்கள் மாமன் மகன் மற்றும் மாமன் மகள் மீது ஊற்றி விளையாடினா். இதனால் உறவு பலப்படும், நோய்கள் தீரும், மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    அதன்படி மாமா மகன் மீது அத்தை மகள்களும், அத்தை மகள் மீது மாமன் மகன்களும் ஒருவர் மீது மற்றொருவர் மஞ்சள் கலந்த நீரை ஊற்றி கொண்டாடினர். 

    • சில சாய தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சாய கழிவு நீரை கிணறுகள், ஓடைகளில் வெளியேற்றுகின்றன.
    • உடலில் மஞ்சள் நிற தண்ணீரை கொண்டு குளித்தால் சொறி, கொப்பளம், அரிப்பு உள்ளிட்ட தோல் சரும பிரச்சனைகள் வருகிறது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம்,சின்னக்கரை, கரைப்புதூர், கணபதிபாளையம் பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள், சாய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சாய கழிவு நீரை கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், நீர் நிலை ஓடைகளில் வெளியேற்றுகின்றன.

    அதனால் நிலத்தடி நீர் பாதிப்படைகிறது. பருவ மழை காலங்களில் இது போன்ற விதி மீறல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,பச்சாங்காட்டுபாளையத்தில் ஒரு விவசாய தோட்டத்து குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இது குறித்து பாலாமணி என்பவர் கூறுகையில் ,மஞ்சள் நிறத்தில் வரும் தண்ணீரை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்த முடியவில்லை. உடலில் இந்த தண்ணீரை கொண்டு குளித்தால் சொறி, கொப்பளம், அரிப்பு உள்ளிட்ட தோல் சரும பிரச்சனைகள் வருகிறது. விவசாயத்திற்கு விட்டால் பயிர் சாகுபடி பாதிப்படைகிறது. மகசூல் கிடைப்பதில்லை. தென்னை மரம் நாளுக்கு நாள் காய்ந்து வருகிறது. கால் நடைகள் இந்த தண்ணீரை குடிப்பதில்லை. வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தால் அந்த கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. எங்களது அன்றாட சொந்த உபயோகத்திற்கு லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி தான் பயன்படுத்துகிறோம். குடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் வழங்கும் குடிநீரை பிடித்து வைத்து பயன்படுத்தி வருகிறோம்.

    இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் பல்லடத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுபாட்டு உதவி செயற்பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    ×