search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் இயக்க விழிப்புணர்வு"

    • தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் செல்வராஜ் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட துணி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர் .

    பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர் . இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் திருப்பூர் மாநகரை தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    பள்ளி மாணவிகளுக்கு மக்கும், மக்கா குப்பையை பிரித்து வழங்கும் வகையில் குப்பை பாக்சை செல்வராஜ் எம்.எல்.ஏ., தினேஷ்குமார் அருகில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் மற்றும் பலர் உள்ளனர்.

    • ஒவ்வொரு நகராட்சியிலும் குப்பைகளை தரம் பிரித்து நகராட்சிக்கு கொடுப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது.
    • குப்பை மூலம் பயோகேஸ் அமைப்பு ஏற்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கொடைக்கானல்:

    தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிப்பகுதிகளில் தூய்மைப் பணிகளில் மக்களின் பங்கு அதிகம் தேவை என்ற நிலையில் ஒவ்வொரு நகராட்சியிலும் குப்பைகளை தரம் பிரித்து நகராட்சிக்கு கொடுப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது.

    கொடைக்கானல் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சரவணன், கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன், நகர்மன்ற துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி, கொடைக்கானல் கிறிஸ்தவக் கல்லூரியின் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தை தூய்மை படுத்தினார்கள். முன்னதாக நடந்த நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோருக்கு குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என எவ்வாறு தரம் பிரித்து நகராட்சி துப்புரவுப்பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்பது பற்றியும் மக்கும் குப்பை மூலம் பயோகேஸ் அமைப்பு ஏற்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ×