search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் நலன்"

    • கடலூர் மாவட்டத்தில் சுதந்திரதின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கடலூர் கலெக்டர் பாலசுப்பரமணியம் அறிவித்துள்ளார்.
    • குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த நடவடிக்கையில் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறையில் பணிபுரிந்து மகளிர் நலனுக்காக தொண்டாற்றிய சமூக சேவை நிறுவனங்களுக்கும் ரொக்க பரிசு, தங்கபதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.இவ்விருது பெற தகுதியுடைய விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும் இருத்தல் வேண்டும் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் 30- ந்தேதி க்குள் விண்ணப்பித்து அதன் நகலை மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, செம்மண்டலம், கடலூர் என்ற விலாசத்தில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ×