search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக சேவை"

    • முன்னரே போதை பழக்கம் உள்ள பிரின், அன்று மரிஜுவானாவை பயன்படுத்தினார்
    • 2 வருட புரொபேஷன் மற்றும் 100 மணி நேர சமூக சேவைக்கு நீதிபதி உத்தரவிட்டார்

    கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பெண் பிரின் ஸ்பெசர் (Bryn Spejcher).

    பிரின், "அக்கவுன்டன்ட்" பணியில் இருந்த சாட் ஒமேலியா (Chad O'Melia) எனும் 26-வயது ஆண் நண்பரை அடிக்கடி சந்தித்து வந்தார்.

    பிரின் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்.

    2018 மே மாதம், தனது ஆண் நண்பர் ஒமேலியாவை சந்திக்க பிரின் சென்றார். அப்போது பிரின் மரிஜுவானா எனும் போதை பொருளை பயன்படுத்தினார். அதில் அவர் தனது சுயகட்டுப்பாட்டை இழந்தார்.

    அந்நிலையில் அவருக்கும் ஒமேலியாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோபத்திலும், போதை மருந்தின் மயக்கத்திலும், என்ன செய்கிறோம் என்பதை அறியாத பிரின், ஒமேலியாவை ஒரு கத்தியால் 108 முறை கத்தியால் குத்தினார்.


    இதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் ஒமேலியா.

    தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது உடல் முழுவதும் ரத்தத்துடன், கையில் கத்தியை பிடித்தவாறு, அழுது கொண்டே இருந்தார் பிரின்.

    காவல்துறையினர் அவரை பிடிக்க முற்பட்ட போது தனது கையில் இருந்த கத்தியால் தன் கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக காவல் அதிகாரிகள் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    ஒமேலியாவை மட்டுமின்றி தனது நாயையும் குத்தி கொன்றார், பிரின் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

    நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், பிரின் தரப்பு வழக்கறிஞர்கள் போதை மருந்தின் தாக்கத்தில் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் அவர் கொலை செய்து விட்டதாக வாதிட்டனர்.

    இந்நிலையில், வென்சுரா கவுன்டி நீதிமன்ற நீதிபதி டேவிட் வோர்லி, பிரின் தனது செயலிலும் எண்ணத்திலும் கட்டுப்பாடே இல்லாமல் இந்த கொலையை செய்துள்ளதால் அவருக்கு சிறை தண்டனை வழங்காமல், 2 வருட "ப்ரொபேஷன்" (ஒரு நன்னடத்தை கண்காணிப்பு அதிகாரியின் மேற்பார்வையில் வாழுதல்) மற்றும் 100 மணி நேரம் சமூக சேவை புரியவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.


    நீதிமன்றத்தில் சாட் ஒமேலியாவின் தந்தை ஷான் ஒமேலியாவிடம் அழுது கொண்டே மன்னிப்பு கேட்டார், பிரின்.

    ஆனால் இத்தீர்ப்பு குறித்து ஷான், "நீதிபதி தனது தீர்ப்பின் மூலம் மரிஜுவானா புகைப்பதற்கு அனைவருக்கும் உரிமம வழங்கி விட்டார்" என கோபத்துடன் தெரிவித்தார்.

    • கிராம இளைஞர்களுக்கு சமூக சேவை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
    • மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலகத்தை அணுகலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட அளவில் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வத்தொண்டு மற்றும் சமூக சேவை குறித்து 3 மாத சான்றிதழ் 150 பேருக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் படிப்பானது 6 நாட்கள் நேரடி வகுப்புகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் சிறந்த வல்லுநர்களால் நடத்தப்படும். மேலும் கிராம அளவில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், வட்டார அலுலவகங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை பற்றி கள ஆய்வு மேற்கொண்டு (Field Assisgnments) சமர்ப்பிக்க வேண்டும். ஊராட்சிகளுக்கான மாவட்ட வன மையத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கிடையே உதவி இயக்குநரால் கள மையத்துக்கு அழைத்து செல்லப்படும். சான்றிதழ் படிப்பிற்கான பாடபுத்தகம், உபகரணங்கள் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். சான்றிதழ் படிப்பின் இறுதியில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த 3 மாத சான்றிதழ் படிப்பில் மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், களப்பணியாளர்கள், கிராம இளைஞர் தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் சேர பயிற்சி கட்டணமாக ரூ.1000 இணைய வழி வாயிலாக ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலரைத் தொடர்பு கொண்டு செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் சுதந்திரதின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கடலூர் கலெக்டர் பாலசுப்பரமணியம் அறிவித்துள்ளார்.
    • குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த நடவடிக்கையில் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறையில் பணிபுரிந்து மகளிர் நலனுக்காக தொண்டாற்றிய சமூக சேவை நிறுவனங்களுக்கும் ரொக்க பரிசு, தங்கபதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.இவ்விருது பெற தகுதியுடைய விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும் இருத்தல் வேண்டும் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் 30- ந்தேதி க்குள் விண்ணப்பித்து அதன் நகலை மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, செம்மண்டலம், கடலூர் என்ற விலாசத்தில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ×