search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிரி கிரிக்கெட்"

    • இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • முதல் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது.

    மும்பை:

    இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 94 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது. தீப்தி ஷர்மா 60 ரன்களுடனும், பூஜா வஸ்த்ரகர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக லாரன் பெல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் கவுர் 49 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஒரு ரன் எடுக்க முயற்சித்த அவர் பாதி தூரம் ஓடினார். மறுமுனையில் இருந்த வீராங்கனை ரன் வேண்டாம் என்று கூறியதால் கவுர் கிறீசுக்கு திரும்பினார். கிறீஸ் அருகே வந்த அவர் பேட்டை கோட்டிற்கு முன் வைத்தார். ஆனால் பேட் எதிர்பாராதவிதமாக பிட்சில் சிக்கி கொண்டது. இதனால் அவர் ரன் அவுட் செய்யப்பட்டார். அவர் எந்தவித சிரமமும் இன்றி கிறீசுக்குள் வந்திருக்கலாம். ஆனால் அவர் மெத்தனமாக செயல்பட்டதே இந்த ரன் அவுட்டுக்கு காரணமாக அமைந்ததது.

    இதேபோல மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியிலும் கவுர் இதேபோல ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×