search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை ெபாருள்"

    • போதை பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர்உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தின.

    சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை பொருட்களை ஒழிப்பதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி விளக்கப்பட்டது. போதைப்பொருள் ஓழிப்பு உறுதிமொழி வாசிக்க மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். கல்லூரி செயலர் ஜபருல்லாஹ்கான் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்தலின் அபாயம் குறித்து பேசினார். மேலும் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி வாசித்தார்.

    இதில் இளையான்குடி, வருவாய் கோட்டாட்சியர் சுகிந்தா, இளையான்குடி, போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் மணிகண்டேஸ்வரர், சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரி முத்துசாமி, வட்டாச்சியர் அசோக் குமார், துணைவட்டாச்சியர் முத்துவேல், வருவாய் ஆய்வாளர் பிரபு, கிராம நிர்வாக அலுவலர் ராம கிருஷ்ணன், சதீஸ்குமார் மற்றும் அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, சேக் அப்துல்லா மற்றும் இளை யோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் நர்கீஸ் பேகம் ஆகியோர் செய்திருந்தனர். தமிழ்த்துறை தலைவர் இப்ராஹிம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முஹம்மது நன்றி கூறினார்.

    ×