search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டியில்"

    • ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை), நாளை(ஞாயிற்றுகிழமை) ஆகிய 2 நாட்கள் உட்பால் கோல்ப் எனும் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது.
    • சேலம் ஜெயராம் பப்ளிக் பள்ளி மாணவி லலிதா விஷ்வா, மாணவர் கனிஷ், ஏ.எம்.பப்ளிக் பள்ளி மாணவர் சுதர்சன், மணியனூர் அரசு பள்ளி மாணவர் ரிசத்குமார், சேலம் வி ஸ்போர்ட்ஸ் சோலையம்மாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    சேலம்:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை), நாளை(ஞாயிற்றுகிழமை) ஆகிய 2 நாட்கள் உட்பால் கோல்ப் எனும் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் தமிழக அணை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் சேலம் ஜெயராம் பப்ளிக் பள்ளி மாணவி லலிதா விஷ்வா, மாணவர் கனிஷ், ஏ.எம்.பப்ளிக் பள்ளி மாணவர் சுதர்சன், மணியனூர் அரசு பள்ளி மாணவர் ரிசத்குமார், சேலம் வி ஸ்போர்ட்ஸ் சோலையம்மாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களுக்கான வழியனுப்பு விழா ஜெயராம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி தலைவர் ஜெயஸ்ரீ, பள்ளி தாளாளர் தினேஷ், பள்ளி முதல்வர் பவுல் பிரான்சிஸ் சேவியர், மணியனூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன், ஏ.எம்.பப்ளிக் பள்ளி முதல்வர் பானு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மாநில உட்பால் கோல்ப் செயலாளர் மாங்க் பிரசாத், துணை செயலாளர் திலகம் ஆகியோர் செய்திருந்தனர். 

    • தடகள போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது
    • அரசு பள்ளி 10ம் வகுப்பு படித்து வருகிறார்

    கரூர்,

    கரூர் மாவட்ட அளவிலான தடகள் போட்டியில் சிறப்பிடம் பெற்ற, அரசு பள்ளி மாணவரை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

    கரூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் விஷ்ணு, உயரம் தாண்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்றார். மாணவர் விஷ்ணுவை, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ரூபா, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் 'ஆகியோர் பாராட்டினர்.

    ×