search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோல்ப்"

    • ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை), நாளை(ஞாயிற்றுகிழமை) ஆகிய 2 நாட்கள் உட்பால் கோல்ப் எனும் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது.
    • சேலம் ஜெயராம் பப்ளிக் பள்ளி மாணவி லலிதா விஷ்வா, மாணவர் கனிஷ், ஏ.எம்.பப்ளிக் பள்ளி மாணவர் சுதர்சன், மணியனூர் அரசு பள்ளி மாணவர் ரிசத்குமார், சேலம் வி ஸ்போர்ட்ஸ் சோலையம்மாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    சேலம்:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை), நாளை(ஞாயிற்றுகிழமை) ஆகிய 2 நாட்கள் உட்பால் கோல்ப் எனும் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் தமிழக அணை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் சேலம் ஜெயராம் பப்ளிக் பள்ளி மாணவி லலிதா விஷ்வா, மாணவர் கனிஷ், ஏ.எம்.பப்ளிக் பள்ளி மாணவர் சுதர்சன், மணியனூர் அரசு பள்ளி மாணவர் ரிசத்குமார், சேலம் வி ஸ்போர்ட்ஸ் சோலையம்மாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களுக்கான வழியனுப்பு விழா ஜெயராம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி தலைவர் ஜெயஸ்ரீ, பள்ளி தாளாளர் தினேஷ், பள்ளி முதல்வர் பவுல் பிரான்சிஸ் சேவியர், மணியனூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன், ஏ.எம்.பப்ளிக் பள்ளி முதல்வர் பானு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மாநில உட்பால் கோல்ப் செயலாளர் மாங்க் பிரசாத், துணை செயலாளர் திலகம் ஆகியோர் செய்திருந்தனர். 

    ×