search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து அலுவலகம்"

    • போக்குவரத்து அலுவலகத்திற்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டது.
    • இடம் தேர்வு செய்த எம்.எல்.ஏ தங்கபாண்டியனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு சட்ட மன்ற பேரவைக் ககூட்டத்தொடரில் போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கையில், ராஜபாளையத்தில் புதியதாக வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளி யானது.

    இதைத்தொடர்ந்து அலுவலகம் தற்காலிமாக ராஜபாளையம் தென்காசி ரோட்டில் யூனியன் ஆபிஸ் எதிரே உள்ள கட்டிடத்தில் தொடங்க எம்.எல்.ஏ தங்கபாண்டியனின் ஆலோசனைப்படி இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் போக்கு வரத்து துணை ஆணையர் ரவிச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ராஜபாளையம் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் தற்போது 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக வாடகைக்கு கட்டிடத்தில் தொடங்கப்பட்டு பின் அலுவலகத்திற்கென தனியாக புதியதாக சொந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

    இதில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், துணை அமைப்பாளர் இக்சாஸ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து மாணவரணி நாகேஷ்வரன் கலந்து கொண்டனர்.

    பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் இடம் தேர்வு செய்த எம்.எல்.ஏ தங்கபாண்டியனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    • புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
    • இந்த திட்டத்திற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்ட மன்ற பேரவைக்கூட்டத்தொடரில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில் ராஜபாளையத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் இடையில் செயல்பட்டு வந்த வட்டார போக்குவரத்து அலுவலகம் கடந்த ஆட்சியாளர்களால் ராஜபா ளையம் தொகுதியில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்- கிருஷ்ணன்கோவில் அருகில் கொண்டு செல்லப்பட்டது,

    இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற மிகவும் அவதிப்படுவதாக என்னிடம் பொது மக்களும், வாகன ஓட்டுநர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர், உடனடியாக நான் ராஜபாளையம் தொகுதிக்கு புதிதாக வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகம் அமைக்க வேண்டி முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்து தொடர்ந்து வலியுறுத்தியதின் பலனாக போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கையில் ராஜபாளையம் தொகுதிக்கு புதியதாக வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியா கியுள்ளது.

    இந்த அறிவிப்பு வெளி யாக நடவடிக்கை எடுத்த முதல்- அமைச்ச ருக்கும், போக்கு வரத்துத்துறை அமைச்ச ருக்கும், வருவாய்த்துறை அமைச்ச ருக்கும், தொழில் துறை அமைச்சருக்கும், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டிக்கும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பிலும் எனது சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ராஜபா ளையம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்ப டுத்தி வருகிறார்.

    அதில் சிறப்பு வாய்ந்த திட்டமான சாத்தூர் கோட்டாட்சியர் அலுவ லகத்துடன் செயல்பட்டு வந்த ராஜபா ளையம் வட்டத்தை மீண்டும் சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது.

    ராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் திட்டம், செயல்படுத்தப்பட்டு தற்போது டெண்டர் விட்டு பணி தொடங்கப்பட உள்ளது.

    ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் முதல் சக்தி கண் மருத்துவமனை வரை இணைப்பு சாலை அமைக்கும் திட்டம்,செயல்படுத்தப்பட்டு இந்த திட்டத்திற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    ராஜபாளையம் தொகுதிக்கு புதியதாக வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைக்கும் திட்டம் என மேற்கண்ட 4 சிறப்பு வாய்ந்த திட்டங்களை ராஜபாளையம் தொகுதிக்கு வழங்கிய முதல்-அமைச்சருக்கு ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான நானும், பொதுமக்களும் உறுது ணையாக இருப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு இன்னமும் இடம் ஒதுக்கப்படவில்லை.
    • ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வீரபாண்டி :

    திருப்பூரில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிக அளவில் வாகன பதிவுகள் நடைபெறுகின்றன. திருப்பூர் மாவட்டம் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு இன்னமும் இடம் ஒதுக்கப்படவில்லை. பல்வேறு பகுதிகளில் இடம் தேடப்பட்டு வந்தது. இன்னமும் இடம் தேர்வு செய்யாமல் கிடப்பில் உள்ளன.

    தற்போது அலுவலகம் உள்ள இடத்தில் போதிய இட வசதி இல்லாததால் நொச்சிப்பாளையம் செல்லும் சாலையில் ஏ.பி.நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வாகன ஆய்வு பணிகள் தற்காலிகமாக நடந்து வருகின்றன. இங்கு அதிகப்படியான வாகனங்கள் புதுப்பித்தல் மற்றும் ஆய்வு பணிக்கு வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு ஆய்வுக்கு வரும் வாகனங்கள் நொச்சிபாளையம் சாலைக்கு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் நொச்சிப்பாளையம் பிரிவு சாலை வரை அணிவகுத்து நிற்கின்றன. ஆய்வு நடக்கும் தனியார் இடத்திலும் இடமின்றி ஆய்வுக்கு வந்த வாகனங்கள் நொச்சிப்பாளையம் சாலை வரை வரிசையில் நிற்கின்றன.

    நொச்சிப்பாளையம் சாலையில் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு ஆய்வுக்கு வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் நொச்சிப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு விரைவாக இடம் தேர்வு செய்து அரசு இடத்தில் ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×