search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்கள் ஏலம்"

    • சார்பு உபகரணங்கள் தற்போது வலுவடைந்ததின் அடிப்படையில் கழிவு நீக்கம் செய்வதற்காக வரும் 17-ந் தேதி நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.
    • இதற்காக கழிவு பொருட்கள் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் துறையில் தொழில்நுட்ப பிரிவில் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ், அதன் சார்பு உபகரணங்கள் தற்போது வலுவடைந்ததின் அடிப்படையில் கழிவு நீக்கம் செய்வதற்காக வரும் 17-ந் தேதி நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது. இதற்காக கழிவு பொருட்கள் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. ஏலத்தில் அரசு விதிகளின் வழிகாட்டுதலுக்கு இணங்க தகுதிச் சான்று உள்ள நிறுவனங்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேலும் ஏலத்தில் பங்கேற்று கழிவு பொருட்களை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகை முழுவதையும் மற்றும் அப்பொருளுக்கு உண்டான ஜி.எஸ்.டி. தொகையுடன் செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

    • 6800 தேங்காய்கள் 17 ரூபாயிலிருந்து 22 ரூபாய் வரையிலும், 41 மூட்டைகள்
    • வர்த்தகத்தில் இரண்டு லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று விவசாய விலை பொருட்கள் ஏலம் நடைபெற்றது.

    இந்த ஏலத்திற்கு அந்தியூர் மற்றும் அந்தியூர் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாய விளை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதில் 6800 தேங்காய்கள் 17 ரூபாயிலிருந்து 22 ரூபாய் வரையிலும், 41 மூட்டைகள் தேங்காய் பருப்பு 77 ரூபாயிலிருந்து 83 ரூபாய் வரையிலும்,

    ஐந்து மூட்டைகள் எள் 158 ரூபாயிலிருந்து 159 ரூபாய் வரையிலும், எட்டு மூட்டைகள் ஆமணக்கு 68 ரூபாயிலிருந்து 73 ரூபாய் வரையிலும், இரண்டு மூட்டைகள் தட்டைப் பயிறு 38 ரூபாயிலிருந்து 65 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    வர்த்தகத்தில் இரண்டு லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் ஞானசேகர் தெரிவித்தார்.

    ×