search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electronics"

    • அலங்காரப் பொருட்கள் கூட ரகசிய கேமராவை கொண்டிருக்கலாம்.
    • கேமராக்கள் பெரும்பாலும் மின்னணு சாதனங்களில் மறைக்கப்படுகின்றன.

    மறைந்திருக்கும் ரகசிய கேமராக்களால் அம்பலமாகும் அபாயம் தற்போது நிறைய இடங்களில் இருக்கிறது. ஓட்டல், ஜவுளிக்கடையில் உடை அணிந்து பார்க்கும் அறை, பொதுவான இடங்களில் உள்ள கழிப்பிடம் போன்றவற்றில் ரகசிய கேமராக்கள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கலாம்.

    இந்நிலையில், ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி என்று பார்க்கலாம். ஓட்டல் அறைக்குள் சென்றதும். முதலில் அறையில் தேவையற்ற பொருட்களைக் கண்டால், உடனடியாக அவற்றை அகற்றச் சொல்லுங்கள். அகற்ற முடியாத பொருள் என்றால், அதுகுறித்து எச்சரிக்கையாக இருங்கள். அலங்காரப் பொருட்கள் கூட ரகசிய கேமராவை கொண்டிருக்கலாம்.

    கேமராக்கள் பெரும்பாலும் மின்னணு சாதனங்களில் மறைக்கப்படுகின்றன. எனவே தங்கும் அறையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் மீது கவனம் செலுத்துங்கள். ஸ்பீக்கர்கள் அல்லது கேட்கும் சாதனங்களை நன்றாகப் பாருங்கள். இதன் மூலம் கேமராவை எளிதில் மறைக்க முடியும். எனவே இவை அனைத்தையும் சரியாக கவனிக்கவும்.

     குளியலறை கொக்கிகள் அல்லது துணி தொங்கும் கம்பியை சரிபார்க்கவும். கேமராக்களை ஹேங்கர்களிலும் மறைத்து வைக்கலாம். அறையில் உள்ள திரைச் சீலைகளையும் நன்றாகப் பாருங்கள்.

     உங்களுக்கு கண்ணாடியின் மீது சந்தேகம் எழுந்தால் உடனே அதன் அருகில் சென்று உங்கள் விரலை கண்ணாடியில் வைக்கவும். உங்கள் விரலுக்கும், கண்ணாடியின் பிரதிபலிப்பிற்கும் இடைவெளி இருந்தால் அது உண்மையான கண்ணாடி. இடைவெளி இல்லாமல் இரண்டும் ஒட்டி இருந்தால் அது பொய்யான கண்ணாடி அதன் பின்னணியில் ஆபத்து இருக்க வாய்ப்பிருக்கிறது.

    இன்னொன்று சில கேமராக்கள் இரவிலும் செயல்படக்கூடியதாக இருக்கும் அதனால் அதனைச்சுற்றி எல்.ஈ.டி. விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கும். நீங்கள் அறையின் விளக்கை அணைத்தால் அது தெரிய வாய்ப்பிருக்கிறது.

     இதுதவிர இன்ஃப்ராரெட் கேமராக்களை நீங்கள் உங்கள் கைபேசி கேமராக்கள் வழியாகவே கண்டறியமுடியும். கேமராவை ஆன்செய்து ஒவ்வொரு இடமாக நகர்த்தினால் அங்கு கேமரா இருந்தால் சிவப்பு நிற விளக்கு எரியும். அதை வைத்து கண்டறியலாம். ரிமோட்டின் மேல் பகுதியிலுள்ள விளக்குபோன்ற பகுதிக்கு முன் செல்போன் கேமராவை வைத்து படமெடுத்தபடியே எந்த பட்டனையாவது அழுத்தினால் அதில் சிவப்பு நிற ஒளி எரியும். அவைதான் இன்ஃப்ராரெட். இது சாதரண கண்களுக்கு தெரியாது. தேவை இல்லாமல் எதாவது வயர் சென்றால் அந்த இடத்தை சோதித்துப் பாருங்கள்.

    "ஹிட்டன் கேமரா டிடெக்டர்" என்ற ஒரு ஆப் உள்ளது. இதன்மூலமும் கண்டறியலாம். இந்த ஆப்பை முழுமையாக நம்ப முடியாது என்றாலும், ஓரளவு நம்பகத்தன்மை கொண்டதுதான். இப்படியான வழிகளைக்கொண்டு நாம் கண்டறியலாம். நீங்கள் ஒருவேளை அதை உறுதிசெய்தால் உடனே அதை பதிவு செய்யுங்கள், காவல்துறையை, சைபர் கிரைமை அணுகுங்கள். நமது பாதுகாப்பு, நமது உரிமை. அதை பறிக்க யாருக்கும் உரிமையில்லை. அப்படி அத்துமீறுபவர்களுக்கு தண்டனை கொடுப்பது நமது கடமை.

    • சார்பு உபகரணங்கள் தற்போது வலுவடைந்ததின் அடிப்படையில் கழிவு நீக்கம் செய்வதற்காக வரும் 17-ந் தேதி நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.
    • இதற்காக கழிவு பொருட்கள் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் துறையில் தொழில்நுட்ப பிரிவில் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ், அதன் சார்பு உபகரணங்கள் தற்போது வலுவடைந்ததின் அடிப்படையில் கழிவு நீக்கம் செய்வதற்காக வரும் 17-ந் தேதி நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது. இதற்காக கழிவு பொருட்கள் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. ஏலத்தில் அரசு விதிகளின் வழிகாட்டுதலுக்கு இணங்க தகுதிச் சான்று உள்ள நிறுவனங்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேலும் ஏலத்தில் பங்கேற்று கழிவு பொருட்களை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகை முழுவதையும் மற்றும் அப்பொருளுக்கு உண்டான ஜி.எஸ்.டி. தொகையுடன் செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

    • தொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு நடந்தது.
    • மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் ஐ.இ.டி.இ. மாணவர் அமைப்பு ''தொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்'' என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி ஆகியோர் பேசினர்.

    மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் திண்டிவனம் பொறியியல் உறுப்புக்கல்லூரி வேலை வாய்ப்புத்துறை அதிகாரி ஜெ.லட்சுமி கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், மாணவர்கள் பணி நிறுவனங்களின் நேர்காணலின் போது சுயவிவரத்தை எவ்வாறு தயார் செய்யவேண்டும் என்பதை பற்றி எடுத்துரைத்தார். சுயவிவரம்-பயோடேட்டா இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை விளக்கினார்.

    நேர்காணலின்போது சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள், விண்ணப்பித்த பதவிக்கான தேவைகள், தகுதி ஆகியவற்றை நன்றாக வளர்த்து கொண்டு அதன் பிறகு நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னணுவியல் துைற பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், தனம், பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×