என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பொருட்கள் எரிந்து சேதம்
நீங்கள் தேடியது "பொருட்கள் எரிந்து சேதம்"
நெல்லை அருகே தாழையூத்து பூலித்தேவன் நகரில் இலங்கை தமிழருக்கான ஈழஎதிலியல் மறுவாழ்வு கழக அலுவலகத்தில் திடீரென தீ விபத்து. இதில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து பூலித்தேவன் நகரில் இலங்கை தமிழருக்கான ஈழஎதிலியல் மறுவாழ்வு கழக அலுவலகம் உள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக மகேஷ்வரன் என்பவர் உள்ளார். சம்பவத்தன்று இவர் அலுவலகத்தை பூட்டி விட்டு கங்கைகொண்டான் அகதிகள் முகாமிற்கு சென்று விட்டார்.
இரவு திடீரென அந்த அலுவலகத்தில் தீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இதுபற்றி அறிந்த மகேஷ்வரன் தாழையூத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தீ விபத்தில் சேதமான பொருட்களின் மதிப்பு என்ன? தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X