search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் ரெசிப்பி"

    • கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கல்.
    • பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக செய்யலாம்.

    பொதுவாகவே பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலும் வெண்பொங்கலும் செய்வது வழக்கம் தான். என்னதான் வீட்டில் பொங்கல் செய்தாலும் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலின் சுவைக்கு பல ரசிகர்கள் உண்டு. அதனால் இந்த பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக இன்னும் சுவையான கோவில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலை வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள். ரசித்து சாப்பிடுவார்கள்! அப்படி கோவிலில் கொடுக்கப்படும் பொங்கலில் என்ன வித்தியாசமாக சேர்க்கிறார்கள்... நாம் சேர்க்கும் எவற்றை சேர்ப்பதில்லை என்ற ரெசிபி உங்களுக்காக...

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - 1 கப்

    வெல்லம் - 1/4 கிலோ

    தேங்காய் - 4 முதல் 5 பத்தை

    முந்திரி - தேவைக்கேற்ப

    உலர்ந்த திராட்சை - தேவைக்கேற்ப

    சுத்தமான பசு நெய் - 7 முதல் 8 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

    பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை

    செய்முறை:

    முதலில் அரிசியை நன்றாக கழுவிய பின்னர் நிறைய தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக குழைந்து வெந்த பின்னர் சாதத்தை வடிக்காமல் சல்லடை பாத்திரத்தில் போட்டு வேகவைத்த தண்ணீரை இறுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் சாதத்தை அதே சட்டியில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து கரண்டியால் மசித்து விட வேண்டும்.

    அதன்பின்னர் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி அதை குழைந்த சாதத்தில் சேர்த்து நன்றாக கலக்குங்கள். சாதமும் வெல்லமும் நன்றாக கலக்கும் வரை நன்றாக கிளறிக் கொள்ளுங்கள். நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இரக்கலாம்.

    பொங்கலை தாளிக்க வேரு ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி உருகியதும் முந்திரி, உலர் திராட்சையை நெய்யில் நன்றாக வறுத்து பொன்நிறமானதும் அதை பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறுங்கள். அதன்பின் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறுங்கள்.

    இறுதியாக கோவில் பிரசாதத்தில் மட்டும் சேர்க்கப் படும் பச்சை கற்பூரத்தை ஒரு சிட்டிகை மட்டும் சேர்த்து கிளறினால் கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல் தயார்.!

    குறிப்பு : கோவில் பிரசாதமாக சர்க்கரை பொங்கல் செய்யும் போது பாசிப்பருப்பு சேர்க்க மாட்டார்கள். கட்டாயம் சேர்க்க வேண்டுமென விரும்பினால் தாராளமாக நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் தற்போது கடைகளில் கிடைக்கும் வெல்லம் உப்பு சேர்த்துதான் தயாரிக்கப்படுகிறது. சுத்தமான வெல்லம் கிடைக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் சாதம் வடிக்கும் போதே ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.. மேலும் சர்க்கரை பால் பொங்கலாக செய்ய விரும்புவர்கள் அரிசியை வெந்தது வடித்ததும் 1 கப் காய்ச்சிய பால் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.!

    • பொங்கல் வகைகளை நாம் வீட்டிலேயே ருசிக்க முடியும்.
    • கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும்.

    பொங்கல் பண்டிகையன்று விதவிதமான பொங்கல் வகைகளை நாம் வீட்டிலேயே ருசிக்க முடியும். எப்போதுமே வீடு, கடைகளில் சாப்பிடும் பொங்கல்களில் இருந்து கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும் கற்கண்டு பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

    சர்க்கரை பொங்கலுக்கு இணையான சுவை கொண்ட பொங்கல் என்றால் கற்கண்டு பொங்கலை குறிப்பிடலாம். கற்கண்டை பொடியாக்கி சிறு பருப்பு மற்றும் அரிசியை வைத்து இந்தப் பொங்கல் செய்யப்படுகிறது. இது சாமிக்குப் படைக்கப்படும் பிரசாதங்களில் முதன்மையானதாகும்.

    தேவையான பொருட்கள்

    அரிசி- 200 கிராம்

    பால்- 200

    கற்கண்டு - 200 கிராம்

    சிறு பருப்பு- 50 கிராம்

    நெய்- தேவைக்கேற்ப

    ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்

    பச்சை கற்பூரம்- ஒரு சிட்டிகை

    சர்க்கரை- 100 கிராம்

    முந்திரி பருப்பு- 10

    உலர் திராட்சை- 10

    செய்முறை:

    அரிசி மற்றும் சிறு பருப்பை (பாசிப் பருப்பு) தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். அரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். சிறு பருப்பை கொஞ்சம் நேரம் ஊற வைத்தால் போதுமானது. 200 கிராம் அரிசிக்கு 100 கிராம் சிறு பருப்பு என்பதே சரியான அளவீடு இதற்கு 200 கிராம் அளவு கொண்ட கப் பயன்படுத்தவும்.

    ஒரு பெரிய குக்கரில் இவை இரண்டையும் ஒன்றாகப் போட்டு ஒன்றரை கப் பால் ஊற்ற வேண்டும். பால் பயன்படுத்தும் அளவிற்கு தண்ணீரும் பயன்படுத்த வேண்டும். அதாவது ஒன்றரை கப் தண்ணீர். பெரிய குக்கரில் கற்கண்டு பொங்கல் சமைப்பது நல்லது. ஏனென்றால் சமைக்கும்போது பால் பொங்கி வெளியே வரக்கூடாது.

    இதையடுத்து மூன்று ஸ்பூன் நெய் சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கி விடுங்கள். நான்கு விசில் அடிக்கும் வரை காத்திருக்கவும். அதிக தீ வைத்து இரண்டு விசில் அடிக்கும் படியும், குறைந்த தீ வைத்து இரண்டு விசில் அடிக்கும் படியும் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ஒரு கப் அளவிற்கு கற்கண்டு எடுத்து அதை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். தற்போது குக்கரில் அரை ஸ்பூன் ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்க்க வேண்டும்

    அடுத்ததாக மிக்சியில் அரைத்த கற்கண்டு பவுடரை அப்படியே சேர்க்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கிண்டவும். தேவைப்பட்டால் 50 கிராம் சர்க்கரை சேர்க்கவும். இதனிடையே மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி அது சூடான பிறகு தேவையான அளவு முந்திரி, உலர் திராட்சை சேர்க்கவும். முந்திரி பருப்பு பொன்னிறத்திற்கு மாறி இருக்க வேண்டும். உலர் திராட்சை சேர்க்க வேண்டும். இறுதியாக ஒரு சிட்டிகை உப்பு மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

    ×