search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டிகள்"

    • 9- வது ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டிகள் டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் நடைபெற்றது.
    • ரிச் ஹவுசிங் அன்ட் பிராப்பர்டீஸ் சேர்மன் எ.ஆர்.ஆதி கார்த்திக் முன்னிலை வகித்தார்.

    நெல்லை:

    நெல்லை கலாச்சார கல்வி , விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, நெல்லை ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் ரிச் ஹவுசிங் பிராப்பர்டிஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய தென்மாவட்ட அளவிலான 9- வது ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டிகள் டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் நடைபெற்றது.

    போட்டிகளை லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் மரியசூசை தொடங்கி வைத்தார்.

    ரிச் ஹவுசிங் அன்ட் பிராப்பர்டீஸ் சேர்மன் எ.ஆர்.ஆதி கார்த்திக் முன்னிலை வகித்தார். விவேகா அறக்கட்டளை நிறுவனர் அழகேசராஜா வரவேற்று, சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். அறக்கட்டளை தலைவர் அமல் ஆர் தாமஸ் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர்கள் ரவிக்குமார், ஸ்டார்வின் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரிச் ஹவுசிங் பிராப்பர்டீஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவன சேர்மன்கள் எ.ஆர்.ஆதி கார்த்திக், எ.ஆர்.கண்ணன் ஆகியோர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நெல்லை ரிச் ஹவுசிங் பிராப்பர்டீஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவனத்தினர், விவேகா அறக்கட்டளை நிர்வாகிகள் இணைந்து செய்திருந்தனர்.

    விவேகா அறக்கட்டளை அதிசயராஜ் நன்றி கூறினார்.

    • பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டிகள் நடக்கிறது.
    • நாளை மறுநாள் நடக்கிறது

    அரியலூர்

    மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. போட்டிகள் 13, 15, 17 வயதிக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெறும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் சொந்த செலவில் சைக்கிள் கொண்டு வருதல் வேண்டும், போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு வர வேண்டும். வயது சான்றிதழ் பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து பெற்று வருதல் வேண்டும். தங்களது ஆதார் அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும். போட்டிகளில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கோ தனிப்பட்ட பொது இழப்புகளுக்கோ பங்குபெறும் மாணவ-மாணவிகளே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கான எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பித்த பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரம், மாணவிகளுக்கு 10 கி.மீ தூரம், 15, 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரம், மாணவிகளுக்கு 15 கி.மீ தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10 இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் காசோலையாக வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703499 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

    ×