search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரிகார்டுகள்"

    • ஆலங்குளத்தில் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகரித்து காணப்படும்.
    • போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேரிகார்டுகள் உடனடியாக வைக்கப்பட்டன.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகரித்து காணப்படும். இதன்காரணமாக அங்கு ஏற்படும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே பேரிகார்டுகள் வைக்க போலீசார் முடிவு செய்தனர்.

    இதையடுத்து போலீசாரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஆலங்குளத்தில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனம் சார்பில் பேரிகார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கார்த்திகா ஸ்டோர்ஸ் உரிமையாளர் எஸ்.எம்.டி. ரத்தினசாமி தலைமை தாங்கினார்.

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்டத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா, செயலாளர் வி.கணேசன், பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆலங் குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்ணபாஸ், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ஆகியோரிடம் 8 பேரிகார்டுகள் ஒப்படைக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து, ஆலங்குளம் பிரதான சாலை மற்றும் அம்பாசமுத்திரம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேரிகார்டுகள் உடனடியாக வைக்கப்பட்டன.

    • நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டிகளின் எச்சரிக்கைக்காக பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
    • காற்றின் வேகத்தால் பேரிகார்டுகள் சாலையிலேயே விழுந்து கிடக்கிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டை கடந்து தென்காசி செல்லும் சாலையில் செல்வவிநாயகர்புரம் உள்ளது. இங்கு அமைந்துள்ள தனியார் மருத்துவமனை அருகே நான்குவழிச்சாலை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதன் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டிகளின் எச்சரிக்கைக்காக பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி செல்வ விநாயகர்புரம் பகுதியிலும் ஒருபுறம் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் மற்றொரு புறம் வழியாக வாகன ஓட்டிகள் செல்லும் வகையில் பேரிகார்டுகள் வைத்து தடுப்பு அமைக்கப்ப ட்டுள்ளது.

    அந்த பேரிகார்டுகள் காற்றின் வேகத்தால் சாலையிலேயே விழுந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் நான்கு வழிச்சாலையில் அந்த பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது தெரியாமல் யாரேனும் மின்னல் வேகத்தில் வாகனங்களில் வந்தால், அவை விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி பேரிகார்டுகளை கீழே விழாதவாறு அதன் கீழ் பகுதியில் மண் மூடை உள்ளிட்டவை வைத்து சாயாத வண்ணம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    ×