search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்"

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முசிறி அரசு கலலூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நுழைவாயில் முன்பு, கல்லூரியில் பணிபுரியும் விலங்கியல் துறை தலைவர் சுந்தர்ராசு, செயலாளர் பிச்சுமணி, பொருளாளர் மருதநாயகம், மூத்த பேராசிரியர்கள் கணிதத்துறை செந்தில்குமார், ஆங்கிலத்துறை முருகராஜ் பாண்டியன், வேதியல் துறை சந்திர மோகன்,

    இயற்பியல் துறை தலைவர் ரேவதி, வரலாற்று துறை தலைவர் ராஜா ரவீந்திரன், வரலாற்று துறை பேராசிரியர் பரமசிவம், நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், பொருளாதார துறை பேராசிரியர் ஹேமா, மற்றும் பேராசிரியர்கள் பேராசிரியைகள் கலந்து கொண்டு வாயில் முழக்க போராட்டத்தை நடத்தினர்.

    போராட்டத்திற்கு இணை பேராசிரியர் பேராசிரியர் பணி மேம்பாடு தொடர்பான அரசாணை எண் 5 முழுவதுமாக அமல் படுத்திட வேண்டும். எம். ஃபில்.,பி. எச்.டி ஊக்க ஊதிய உயர்வுணை உடனடியாக வழங்கிட வேண்டும். புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் எனவும்,

    அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையை கேட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • ஊதியம் உயர்த்தி வழங்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வேலூர்:

    காட்பாடி காந்திநகரில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஜயரங்கன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில், இளங்கலை விடைத்தாள் திருத்துவதற்கு ரூ.12-ம், முதுகலை விடைத்தாள் திருத்துவதற்கு ரூ.15-ம் வழங்கும் நிலை உள்ளது. இதை மாற்றி உயர்த்தி வழங்க வேண்டும். பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தம் செய்யும்போது தேநீர், மற்றும் பிஸ்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் வழங்க வேண்டும். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை சார்ந்த பணிகளை செய்யும்போது அதற்கான பணப்பயனை அன்றே தங்கள் கைகளில் கொடுப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது எங்கள் வங்கி கணக்கில் செலுத்துகிறோம் என்று அதை முறையாக கொடுப்பது கிடையாது. எனவே பழைய முறைப்படி பணி முடிந்தவுடன் எங்களுக்கு பணப்பயன் வழங்க வேண்டும்.

    முறையாக பேராசிரியர்கள் பணி மூப்பு பட்டியல் தயாரித்து பல்கலைக்கழக சார்ந்த பணிகள் வழங்கப்பட வேண்டும்.

    பல மாணவ- மாணவிகள் உரிய நேரத்தில் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இந்த அவல நிலையை போக்கி மாணவ- மாணவிகள் படித்து முடித்த உடனே தங்களது சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×