search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Professors protest"

    • காந்திகிராம பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் குர்மித்சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
    • பதவி ஏற்றவுடன் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த சிவக்குமாருக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்கி அவரது பதவியை 6 மாதம் நீட்டிப்பு செய்தார்.

    சின்னாளபட்டி:

    காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பதிவாளராக இருந்தவர் சிவக்குமார். இவரது பதவிக்காலம் கடந்த 9.12.2022ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் மத்திய தணிக்கைக்குழு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது பிசியோதெரப்பீஸ்ட்டு படித்த தகுதியில்லாத நபரை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக எவ்வாறு நியமனம் செய்தீர்கள் என கேட்டு அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இதனிடையே பொறுப்பு பதிவாளராக ரங்கநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் குர்மித்சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

    அவர் பதவி ஏற்றவுடன் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த சிவக்குமாருக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்கி அவரது பதவியை 6 மாதம் நீட்டிப்பு செய்தார். அப்போதும் பல்கலைக்கழக பேராசிரியர்களிடையே மிகுந்த எதிர்ப்பு கிளம்பியது.

    இந்நிலையில் பதிவாளர் சிவக்குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆனால் மீண்டும் அவருக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்கி துணைவேந்தர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தலைவர் ராஜாபிரான்மலை தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைகழகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பதிவாளர் பணிநியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இதற்கு உத்தரவு வழங்கிய துணைவேந்தருக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    • ஊதியம் உயர்த்தி வழங்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வேலூர்:

    காட்பாடி காந்திநகரில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஜயரங்கன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில், இளங்கலை விடைத்தாள் திருத்துவதற்கு ரூ.12-ம், முதுகலை விடைத்தாள் திருத்துவதற்கு ரூ.15-ம் வழங்கும் நிலை உள்ளது. இதை மாற்றி உயர்த்தி வழங்க வேண்டும். பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தம் செய்யும்போது தேநீர், மற்றும் பிஸ்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் வழங்க வேண்டும். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை சார்ந்த பணிகளை செய்யும்போது அதற்கான பணப்பயனை அன்றே தங்கள் கைகளில் கொடுப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது எங்கள் வங்கி கணக்கில் செலுத்துகிறோம் என்று அதை முறையாக கொடுப்பது கிடையாது. எனவே பழைய முறைப்படி பணி முடிந்தவுடன் எங்களுக்கு பணப்பயன் வழங்க வேண்டும்.

    முறையாக பேராசிரியர்கள் பணி மூப்பு பட்டியல் தயாரித்து பல்கலைக்கழக சார்ந்த பணிகள் வழங்கப்பட வேண்டும்.

    பல மாணவ- மாணவிகள் உரிய நேரத்தில் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இந்த அவல நிலையை போக்கி மாணவ- மாணவிகள் படித்து முடித்த உடனே தங்களது சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×