search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சிப்பாறையில்"

    • கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை
    • நேற்று மாவட்டம் முழுவதும் சற்று மழை குறைந்திருந்தது.

    நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவ தும் சற்று மழை குறைந்திருந்தது. ஆனால் பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது. பேச்சிப் பாறையில் அதிகபட்சமாக 47.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நாகர்கோவிலில் இன்று நான்கு நாட்களுக்குப்பிறகு சுட்டெரிக்கும் வெயில் அடிக்க தொடங்கியது. மாவட்டம் முழுவதும் மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதையடுத்து தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம், வடிய தொடங்கியுள்ளது. முன்சிறை,திக்குறிச்சி பகுதி களில் தண்ணீர் வடிந்து வரும் நிலையில் முழுமை யாக தண்ணீர் வடியவில்லை.

    இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இதேபோல் தேரேகால்புதூர், தோவாளை பகுதிகளில் விளைநிலங்களை சூழ்ந்த வெள்ளமும் வடிந்து வருகிறது. மழைக்கு 315 ஹெக்டேர் நெற்பயிர்கள் மூழ்கி இருந்த நிலையில் தற்போது அதை சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது. தண்ணீர் வடிந்தாலும் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயி உள்ளனர்.

    பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து முளைத்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திற்பரப்பு அருவிப்பகுதியில்
    தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை இன்று ¾ அடியும், பெருஞ் சாணி அணை 1¾ அடியும், மாம்பழத்துறையாறு அணை 2½ அடியும், முக்கடல் அணை 1½ அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டி ருப்பதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 32.95 அடி யாக இருந்தது. அணைக்கு 1432 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 282 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 61 அடியை எட்டியது. அணைக்கு 1353 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 80 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றாறு-1 நீர்மட்டம் 14.56 அடியாகவும், சிற் றாறு-2 அணையின் நீர்மட்டம் 14.66 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 9.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 32.67 அடியாகவும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 14.10 அடியாகவும் உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழிகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம் பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைகளிலும் பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதை யடுத்து கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகிறார்கள்.

    தொடர் மழைக்கு மாவட் டம் முழுவதும் நேற்று வரை 43 வீடுகள் இடிந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 5 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்து விழுந்து உள்ளது. மேலும் மழைக்கு 50 வீடுகள் சேதமடைந்து உள்ளது.

    • அணைகளின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
    • நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வருகிறது. போது மான அளவு மழை பெய்யா ததால் பாசன குளங்களில் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது. அணைகளின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வெப்பத்தின் தாக்கம் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இன்று காலையில் நாகர்கோவிலில் லேசான சாரல் மழை தூறியது. மயிலாடி, குழித்துறை, முள்ளங்கினா விளை பகுதிகளிலும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை அணை பகுதியில் ஒரு மணி நேரமாக மழை பெய்து கொண்டே இருந்தது. அங்கு அதிகபட்ச மாக 8.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குலசேகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது அதிகாலையில் மழை பெய்தாலும் அதன் பிறகு சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 33.22 அடியாக இருந்தது. அணைக்கு 309 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 687 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 26.20 அடியாக உள்ளது. அணைக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை பெருஞ் சாணி அணையில் இருந்து 937 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் தோவாளை, அனந்தனார், நாஞ்சில் நாடு புத்தனார் சானல்களில் ஷிப்ட் முறையில் வெளி யேற்றப்பட்டு வருகிறது. விவசாயிகள் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×