search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணுக்கு பாலியல் தொல்லை"

    • கணவருடைய சகோதரர் அடிக்கடி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
    • புகாரின்பேரில் கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள குமணன்ெதாழு வெம்பூர் மேற்குதெருவை சேர்ந்த மணீஸ்வரன் மனைவி மேகலா(34). இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் வாய்பேச இயலாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் கணவர் மணீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வரதட்சணை கேட்டு மேகலாவை கொடுமைப்படுத்தி வந்தனர்.

    வரதட்சணை வாங்கி வராததால் அடித்து உதைத்து குழந்தைகளை தங்கள் வசம் வைத்துக்கொண்டனர். மேலும் மணீஸ்வரனின் சகோதரர் கோவிந்தசாமி அடிக்கடி மேகலாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மேகலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர் மணீஸ்வரன், அவரது சகோதரர் கோவிந்தசாமி, தந்தை வேலுச்சாமி, தாய் எட்டியம்மாள், உறவினர்கள் மகேஸ்வரி, கவிதா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • அக்காள் மகள் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    கோவை

    கோவை ராமநாத புரத்தை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டில் அவரது சகோதரி வசித்து வருகிறார். சம்பவத்தன்று அந்த வாலிபர் தனது அக்கா வீட்டுக்கு சென்று தாய் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். அவருக்கு உதவி செய்வதற்கு உனது மகளை அனுப்பி வைக்கும்படி கூறினார்.

    இதனை அடுத்து அவர் தனது 26 வயது மகளை தனது சகோதரனுடன் அனுப்பி வைத்தார். அப்போது வீட்டுக்கு அழைத்து சென்று அவர் தனது அக்காள் மகள் என்று கூட பாராமல் தகாத வார்த்தை களால் பேசி இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதில் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட இளம் பெண்ணின் தாய் அங்கு சென்று பார்த்தபோது தனது மகளை சகோதரன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் அக்காள் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 30 வயது வாலிபர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×