search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A teenager who sexually harassed"

    • பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • அக்காள் மகள் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    கோவை

    கோவை ராமநாத புரத்தை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டில் அவரது சகோதரி வசித்து வருகிறார். சம்பவத்தன்று அந்த வாலிபர் தனது அக்கா வீட்டுக்கு சென்று தாய் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். அவருக்கு உதவி செய்வதற்கு உனது மகளை அனுப்பி வைக்கும்படி கூறினார்.

    இதனை அடுத்து அவர் தனது 26 வயது மகளை தனது சகோதரனுடன் அனுப்பி வைத்தார். அப்போது வீட்டுக்கு அழைத்து சென்று அவர் தனது அக்காள் மகள் என்று கூட பாராமல் தகாத வார்த்தை களால் பேசி இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதில் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட இளம் பெண்ணின் தாய் அங்கு சென்று பார்த்தபோது தனது மகளை சகோதரன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் அக்காள் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 30 வயது வாலிபர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×