search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்"

    • போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர், பிரதீப்பை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளார்.
    • மனமடைந்த பிரதீப் வயல் தெரு பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி விட்டார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பாஸ்கர தொண்டைமான் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரதீப் (வயது 26). இவர் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    குடும்ப தகராறு

    இவருக்கு வீர லட்சுமி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவரது மனைவிக்கும், இவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் வீரலட்சுமி டவுன் மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் மகளிர் போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர், பிரதீப்பை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளார்.

    விஷம் குடித்தார்

    அப்போது அவரை போலீசார் கண்டித்தனர். இதனால் மனமடைந்த பிரதீப் வயல் தெரு பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி விட்டார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து டவுன் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீவிர சிகிச்சை

    உடனடியாக போலீசார் அங்கு சென்று பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விஷம் குடித்த பிரதீப்பின் தாய் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

    ×