என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பெண் தூக்கிட்டு
நீங்கள் தேடியது "பெண் தூக்கிட்டு"
- மாது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (40). இவரது மனைவி மாது (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 6 வருடங்களாக மாதுவுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்காக நாட்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல குமார் வேலைக்கு சென்று விட்டார்.
மதியம் அவரது மகன் செல்போன் மூலமாக அவரை தொடர்பு கொண்டு, தாயார் மாது, வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
உடனடியாக குமார் வீட்டுக்கு சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாதுவை மீட்டு பார்த்துள்ளார். ஆனால், அவர் இறந்துவிட்டார்.
இதுகுறித்து, கணவர் குமார் அளித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X