search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் உடல் மீட்பு"

    • கணவர் பிரகாஷ், அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
    • தீயணைப்புத்துறையினர் உதவியுடன் லதா உடலை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சங்ககிரி:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா சின்னபள்ளத்து சந்து பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கேபிள் ஆபரேட்டராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி லதா (வயது 41). இவர் கடந்த 4-ந் தேதி மாயமானார்.

    இதுகுறித்து கணவர் பிரகாஷ், அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சங்ககிரி புதிய எடப்பாடி ரோட்டில் உள்ள சந்தைப்பேட்டை செல்லியாண்டி அம்மன் கோவில் கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் தெரிந்து அங்கு சென்று பார்த்த பிரகாஷ், கிணற்றில் கிடப்பது தனது மனைவி தான் என உறுதி செய்தார்.

    இதையடுத்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன் லதா உடலை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • சாக்கடை கால்வாயில் பெண் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பாக உள்ள சாக்கடை கால்வாயில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் உடல் நிர்வாண நிலையில் கிடப்பதாக சத்தியமங்கலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகருக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் புகார் செய்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 8 அடி ஆழ சாக்கடையில் அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    நிர்வாண நிலையில் உடல் கிடந்ததாலும், அருகிலேயே பச்சை கலரில் சேலை கிடந்துள்ளதாலும் அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா? அல்லது தவறி சாக்கடையில் விழுந்தாரா? என்பது குறித்தும் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×