search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாக்கடையில்"

    • சாக்கடை கால்வாயில் பெண் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பாக உள்ள சாக்கடை கால்வாயில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் உடல் நிர்வாண நிலையில் கிடப்பதாக சத்தியமங்கலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகருக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் புகார் செய்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 8 அடி ஆழ சாக்கடையில் அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    நிர்வாண நிலையில் உடல் கிடந்ததாலும், அருகிலேயே பச்சை கலரில் சேலை கிடந்துள்ளதாலும் அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா? அல்லது தவறி சாக்கடையில் விழுந்தாரா? என்பது குறித்தும் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு மாஸ் கிளினீங்(ஒருங்கிணைந்த தூய்மை பணி) நடந்தது.
    • இதை அடுத்து அந்த குடியிருப்பு வாசிகளுக்கு மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை 36-வது வார்டில் மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தின் பின்புறம் ஏராளமான மரங்கள், புற்கள் வளா்ந்து புதர் போல காட்சியளித்தது. மேலும், வணிக வளாகங்க–ளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசி வந்தது.

    இதையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு மாஸ் கிளினீங்(ஒருங்கிணைந்த தூய்மை பணி) நடந்தது. சுகாதார ஆய்வாளர் பூபாலன் தலைமையில் சுகாதார உதவியாளர் தங்கராஜ் முன்னிலையில் 38 பேர் கொண்ட தூய்மை பணியாளர்கள் ஜே.சி.பி. வாகனம் மூலம் தூய்மை பணியை மேற்கொண்டனர்.

    இந்த பணிகளை மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி அலுவல–கத்தின் பின்புறம் உள்ள 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து சாக்கடையில் குப்பையையும், கழிவு பொருட்களையும் வீசியது தெரியவந்தது.

    இதை அடுத்து அந்த குடியிருப்பு வாசிகளுக்கு மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வணிக வளாகங்கள், குடியிருப்புகளில் முறையாக கழிவு நீர் வெளியேற பைப் லைன் அமைக்காவிட்டால், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இணைப்பு முற்றிலுமாக அடைக்கப்படும். ஓரிரு நாளில் அதற்கான கட்டமைப்பினை உருவாக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    • குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோடு, குமலன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுப்பற்றி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை.

    இதுகுறித்து, சூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×