search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் தட்டுப்பாடு"

    • பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
    • லாகூர், குஜ்ரன்வாலா, பைசலாபாத் உள்ளிட்ட மாநகரங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் விளைவாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உச்சம் தொட்டு வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அங்கு ஏராளமான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    லாகூர், குஜ்ரன்வாலா, பைசலாபாத் உள்ளிட்ட மாநகரங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. லாகூரில் உள்ள 450 பெட்ரோல் நிலையங்களில் 70 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், மற்ற பெட்ரோல் நிலையங்களிலும் தொடர்ந்து பெட்ரோல் விற்கப்படுவதில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

    • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக திகழ்பவை எரிபொருட்கள் தான்.
    • கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    கோவை:

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக திகழ்பவை எரிபொருட்கள் தான். மோட்டார் வாகனப் போக்குவரத்தில் தொடங்கி தொழிற்சாலைகள் வரை அனைத்துக்கும் எரிபொருட்கள் தான் முக்கிய ஆதாரமாக உள்ளது.

    ஆனால், எரிபொருள் விலை இதுவரை இல்லாத வகையில் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வரவேண்டும்.

    எரிபொருள் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் முதல் தொழிற்சாலைகள் வரை அனைத்தின் இயக்கமும் பாதிக்கப்படும்.

    டீசல் தட்டுப்பாடு காரணமாக விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தொடரும் பட்சத்தில் அது நாட்டின் உற்பத்தியையும், அதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியையும் கடுமையாக பாதிக்கும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்பாறையில் பெட் ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. அங்குள்ள 2 பங்குகளிலும் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதனிடையே கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பங்குகளில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டும் பெட்ரோல் போடப்படுகிறது. கார்களுக்கு ரூ.500 வரை மட்டுமே எரிபொருள் நிரப்பப்படுகிறது.

    ஒரு சில பங்குகளில் எரிபொருள் இல்லை என்ற அறிவிப்பு பலகையே வைக்கப்பட்டுள்ளது. இப்படியே சென்றால் எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அவதியடையும் நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பெட்ரோலிய நிறுவனங்கள் குறித்த நேரத்தில் எரிபொருள் சப்ளை செய்யாமல் இருப்பதே இந்த தட்டு ப்பாடுக்கு காரணம் என்று பங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் எதனால் எரிபொருள் சப்ளையை நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறித்து தெரியவில்லை என்றனர்.

    ×