search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூபேந்திர யாதவ்"

    • 2014-2015 நிதி ஆண்டில் ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை 51 லட்சமாக இருந்தது.
    • 2021-2022 நிதி ஆண்டில் 72 லட்சமாக உயர்ந்தது.

    புதுடெல்லி :

    மோடி அரசு பதவி ஏற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, கடந்த 9 ஆண்டுகளில் மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் டெல்லியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளில், வேலைவாய்ப்பு பெருமளவு அதிகரித்துள்ளது. 1¼ கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் தரவுகளை பார்த்தால், 2014-2015 நிதிஆண்டில், வைப்புநிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட சந்தாதாரர்கள் எண்ணிக்கை 15 கோடியே 84 லட்சமாக இருந்தது. 2021-2022 நிதி ஆண்டில், இந்த எண்ணிக்கை 27 கோடியே 73 லட்சமாக உயர்ந்தது.

    வைப்புநிதி அமைப்பின் சம்பள பட்டியல்படி, கடந்த 2022-2023 நிதி ஆண்டில் மட்டும் 1 கோடியே 38 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். முந்தைய 2021-2022 நிதிஆண்டில் 1 கோடியே 22 லட்சம் சந்தாதாரர்களும், 2020-2021 நிதிஆண்டில் 77 லட்சத்து 8 ஆயிரம் பேரும் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் புதிதாக வேலை பெற்றவர்கள் ஆவர்.

    கடந்த 2014-2015 நிதி ஆண்டில் ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை 51 லட்சமாக இருந்தது. 2021-2022 நிதி ஆண்டில் 72 லட்சமாக உயர்ந்தது. 9 ஆண்டுகளில் 21 லட்சம் பேர் மட்டும் ஓய்வு பெற்ற நிலையில், புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது.

    சேவை, நல்ல நிர்வாகம், நல்வாழ்வு ஆகிய 3 அம்சங்களில் மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது. அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் நலன்களில் மட்டுமின்றி, அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன்களிலும் அக்கறை செலுத்தி வருகிறோம்.

    மொத்த பணியாளர்களில் 10 சதவீதம்பேர் மட்டுமே அமைப்பு சார்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். மீதி 90 சதவீதம்பேர், அமைப்புசாரா தொழிலாளர்கள்.

    அமைப்புசாரா தொழிலாளர்களின் தகவல்களை பதிவு செய்ய 'இ-ஷரம்' இணையதளம் தொடங்கப்பட்டது. 400 வகையான பணிகளை செய்பவர்கள் அதில் பதிவு செய்யப்படுகிறார்கள்.

    இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 231 ஆக உள்ளது. விரைவில், மேலும் 10 ஆயிரத்து 120 படுக்கைகள் உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காற்று மாசுப்பாடு இல்லாத 9 நகரங்களுக்கு விருது வழங்கப்படும்.
    • சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    75வது ஆண்டு சுதந்திர கொண்டாட்ட அமுத பெருவிழாவின் ஒரு பகுதியாக டெல்லியில் சுத்தமான காற்று குறித்த சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடியின் சீரிய தலைமையின் கீழ் காற்று மாசுபாடு மற்றும் பருவநிலை மாறுபாடு குறித்த சவால்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க முனைப்பான நடவடிக்கைகள், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரித்தல், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்த்தல் உள்ளிட்டவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறை என்ற இயக்கம், கழிவுகளை மதிப்புமிக்க பொருட்களாக மாற்றுவதற்கு அடித்தளம் அமைத்திருப்பதுடன், கணிசமாக கழிவுகளைக் குறைக்கும் யுத்திகளையும் கற்றுத்தருகிறது.

    நீடித்த உற்பத்தி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறையை மக்களிடையே கொண்டு செல்வது, பருவநிலை மாறுபாடு, காற்று மாசுபாடு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். இதனை முன்னிறுத்தும் வகையில், தேசிய அளவில் காற்று மாசுப்பாடு இல்லாத நகரம் என்ற விருது 9 நகரங்களுக்கு வழங்கப்படும். இந்த விருதுடன் 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×