search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூசாரி கைது"

    • செல்வியிடம் பறித்த நகையில் தாலிக்கொடியை எனது விவசாய தோட்டத்தில் புதைத்து வைத்தேன்.
    • கொலையான செல்விக்கு 2 குழந்தைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிறந்து உடல்நலக்குறைவால் இறந்து விட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 38). இவருடைய மனைவி செல்வி (28).

    இவர் நேற்று முன்தினம் இளம்பிள்ளை அருகில் உள்ள திருமலைகிரி பாறைக்காட்டூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு சென்ற செல்வியை குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த திருமலைகிரி பெருமாம்பட்டியை சேர்ந்த கோவில் பூசாரி குமார் (42) என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

    செல்வியை கொலை செய்தது குறித்து பூசாரி குமார் போலீசாரிடம் வாக்குமுலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் எனது மனைவியை விவாகரத்து செய்து விட்டேன். எனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கட்டி அதில் பூசாரியாக இருந்தேன். கடன் பிரச்சனை மற்றும் குழந்தையின்மைக்கு தீர்வு என பல்வேறு பிரச்சனைகளுக்கு அருள்வாக்கு பெற எனது கோவிலுக்கு பலர் வந்தனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பல பெண்களுடன் சகஜமாக பேசி எனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து வந்தேன். குறிப்பாக 20 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளேன்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு வந்த செல்வியை எனது வலையில் வீழ்த்த நினைத்து நைசாக பேசி வந்தேன். பூசாரி என்பதால் என்னிடம் செல்வி சகஜமாக பேசினார். அவரிடம் உல்லாசம் அனுபவிக்க நான் நினைத்தேன். அதே நேரத்தில் அவர் தங்க நாணயம் குறைவான விலைக்கு தனக்கு கிடைப்பதாகவும் தான் வாங்கி தருவதாகவும் கூறினார். அதை நம்பி நானும் ரூ.20 ஆயிரம் கொடுத்தேன்.

    ஆனால் செல்வி தங்க நாணயம் வாங்கி தரவில்லை. இருந்தாலும் அவரை எனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவிக்க மீண்டும் திட்டம் போட்டேன். அவர் அதற்கு உடன்படாமல் மறுத்து விட்டார். இது எனக்கு மிகுந்த ஏமாற்றம் அடைந்தது. உல்லாசத்துக்கும் மறுத்து விட்டார். தங்க நாணயமும் வாங்கி தரவில்லை. எனவே எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி செல்போனில் அவரை கோவிலுக்கு வருமாறு அழைத்தேன். அவரும் காலை 11 மணியளவில் கோவிலுக்கு வந்தார். அங்கிருந்து எனது வீட்டுக்கு அவரை அழைத்து சென்றேன். அங்கு ஆசைக்கு இணங்க செய்யலாம் என திட்டமிட்டேன். அதற்கு செல்விக்கு விருப்பம் இல்லாததை உணர்ந்தேன். ஆசைக்கு இணங்க மறுத்த நிலையில் அவரிடம் கொடுத்த பணமும் வீணாக போச்சே என்று நினைத்த போது அவர் அணிந்திருந்த நகைகள் என் கண்களை உறுத்தின.

    ஏற்கனவே காட்டு பகுதியையொட்டி எனது வீட்டின் அருகே நாய் தொல்லை இருப்பதால் அவற்றுக்கு விஷம் வைக்க, வெள்ளிப்பட்டறையில் பயன்படுத்தும் சயனைடு வாங்கி வீட்டில் வைத்திருந்தது ஞாபகம் வந்தது. அந்த விஷத்தை 10 ரூபாய் குளிர்பானத்தில் கலந்து கொடுத்து செல்வியை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    அவரிடம் நைசாக பேசி சயனைடு கலந்த குளிர்பானத்தை கொடுத்தேன். குளிர்பானத்தை குடித்த செல்வி சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்து விட்டார். அதன்பிறகு நான் அவரது உடலை தூக்கிச்சென்று சுமாா் 200 மீட்டர் தொலைவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத புதர்பகுதியில் வீசினேன். இதற்கு முன்னதாக செல்வி கழுத்தில் இருந்த தாலி மற்றும் நகை என 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

    பின்னர் செல்வியிடம் பறித்த நகையில் தாலிக்கொடியை எனது விவசாய தோட்டத்தில் புதைத்து வைத்தேன். மீதமுள்ள 5 பவுன் நகையை எனக்கு பழக்கமான சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த இன்னொரு செல்வியிடம் கொடுத்து அம்மாபேட்டை நகர கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் நகைக்கடனாக பெற்றேன்.

    அதில் 80 ஆயிரம் ரூபாயை எனது நண்பரிடம் வாங்கிய கடனை அடைத்து விட்டு மீதமுள்ள பணத்துடன், எனது கள்ளக்காதலியை அழைத்துக்கொண்டு ஏற்காட்டுக்கு சென்று அன்று இரவே விடுதியில் அறை எடுத்து தங்கி உல்லாசம் அனுபவித்து வந்தேன். இந்த நிலையில் செல்வியின் செல்போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் நான் போலீசிடம் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    போலீசார் பூசாரி குமாரை அழைத்துச் சென்று அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.

    கொலையான செல்விக்கு 2 குழந்தைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிறந்து உடல்நலக்குறைவால் இறந்து விட்டன. இதனால் குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த செல்வி அந்த கவலையை மறக்க இன்ஸ்டாகிராமில் 200-க்கும் மேற்பட்ட பதிவுகளை இட்டு பிரபலம் அடைந்தார். அவரை 1,200-க்கும் மேற்பட்டோர் பின்பற்றி வந்துள்ள நிலையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் மேலோங்கியது. இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திருமலைகிரி பெருமாம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு சென்று குழந்தை வரம் வேண்டி வழிபட்ட செல்விக்கும், பூசாரி குமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆசைக்கு இணங்க மறுத்த நிலையில் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து இன்ஸ்டாகிராம் பெண்ணை பூசாரி கொன்ற பயங்கர சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 15-ந்தேதி காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் பூசாரி குமார், அவரது கூட்டாளி மோகன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர் பட்டி கிராமம் சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (38). இவர் பெங்களூரில் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி (28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த ஓராண்டாக செல்வி குழந்தை பேறுக்காக மருத்துவம் பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது கணவர் பசவராஜ் அக்கம், பக்கத்தில் விசாரித்து பார்த்தார். ஆனாலும் அவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதையடுத்து அவர் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே சேலம் சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி அருகே உள்ள பெருமாம்பட்டி பாறைக்காட்டூர் என்ற பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் முட்புதரில் ஒரு பெண் பிணமாக கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த பெண் மாயமான செல்வி என்று தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தெரியவந்ததும் தாரமங்கலம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது திருமலைகிரி பெருமாம்பட்டியை சேர்ந்த குமார் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த 25 ஆண்டுகளாக தனது தோட்டத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் வைத்து வழிபட்டு வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக செல்வி குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலுக்கு வந்து உள்ளார். அப்போது செல்வி பூசாரி என்ற முறையில் குமாரிடம் பேசி பழகி உள்ளார்.

    அதே போல் சம்பவத்தன்றும் செல்வி வழக்கம் போல் கோவிலுக்கு வந்து உள்ளார். அப்போது பூசாரி குமார், செல்வியை உல்லாசத்துக்கு அழைத்து உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து செல்வி மறுத்து விட்டார். இதுப்பற்றி வெளியே சொன்னால் அவமானப்பட்டு விடுவோம் என்று கருதி செல்வியை கொலைசெய்ய முடிவு செய்தார். அதன்படி குளிர்பானத்தில் சயனைடு கலந்து செல்விக்கு கொடுத்து உள்ளார். இதை வாங்கி குடித்த செல்வி சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து இறந்து விட்டார். பின்னர் அவரது உடலை அருகில் உள்ள முட்புதரில் தூக்கி வீசியுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பூசாரி குமார், அவரது கூட்டாளி மோகன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூசாரி சந்திரசேகர் தப்பி ஓடி தலைமறைவானார்.
    • தலைமறைவாக இருந்து வந்த பூசாரி சந்திரசேகர் திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    அண்ணாநகர்:

    மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். கோவில் பூசாரியான இவர் 15 வயது பள்ளி மாணவிக்கு தோஷம் இருப்பதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

    தனது வீட்டில் தங்கி இருக்க சொல்லி தோஷம் கழிக்க சுற்றி போட வேண்டும் என்று கூறியுள்ள சந்திரசேகர் மாணவியிடம் எல்லை மீறி நடந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கும் போடப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூசாரி சந்திரசேகர் தப்பி ஓடி தலைமறைவானார்.

    தலைமறைவாக இருந்து வந்த பூசாரி சந்திரசேகர் திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பூசாரி சந்திரசேகர் இதுபோன்று வேறு ஏதேனும் சிறுமிகள், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாரா? என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • அக்கம்பக்கத்தினர் பூசாரி பழனியிடம் சென்று மந்திரித்து வந்தால் மகளின் வயிற்று வலி தீர்ந்து விடும் எனக் கூறினர்
    • பூசாரி பழனி நீண்ட காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விசேஷ பூஜைகள் செய்து வந்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மணிபிள்ளை பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 65). இவர் அந்த பகுதியில் உள்ள கருப்புசாமி கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்வார். ஒரு சில பக்தர்களுக்கு அவரின் அருள்வாக்கு பலித்த காரணத்தினால் அந்த ஊர் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சென்றனர்.

    அதுமட்டுமல்லாமல் யாருக்காவது நீண்ட நாள் வியாதி, பில்லி சூனிய பாதிப்பு மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மந்திரித்து, விபூதி கொடுப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவர் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும், பக்தியும் வைத்திருந்த மக்கள் பூசாரி சொல்வதை வேதவாக்காக நினைத்து வந்தனர்.

    இதனால் அந்த ஊரை சேர்ந்த மக்கள் என்ன பிரச்சினை என்றாலும் தொடக்கத்தில் அவரை சென்று பார்த்து வந்தனர். ஒரு சில சுப காரியங்களுக்கும் அவரை அழைத்து சென்று மரியாதை செய்தனர். மொத்தத்தில் மணிபிள்ளை பகுதியில் பூசாரி பழனி ஒரு கடவுள் போல் வலம் வந்தார்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த சரவணன்-மீனாட்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியின் 15 வயது மகள் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். வயிற்றுவலிக்கு அவரது பெற்றோர் கைப்பக்குவமாக மருந்துகள் கொடுத்தும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் மாணவிக்கு வயிற்று வலி பூரணமாக குணமாகவில்லை.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பூசாரி பழனியிடம் சென்று மந்திரித்து வந்தால் மகளின் வயிற்று வலி தீர்ந்து விடும் எனக் கூறினர். மேலும் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இதைக்கேட்டு அங்கலாய்த்து போன மாணவியின் தாய் தனது மகளை அழைத்துக்கொண்டு மணிபிள்ளை தெருவுக்கு சென்றார்.

    பின்னர் வீட்டில் இருந்த கோவில் பூசாரி பழனியை சந்தித்து மகளுக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வருகிறது. இதனை தீர்த்து வையுங்கள் என மன்றாடினார். உடனே பழனி அந்த அபலைப் பெண்ணிடம் உனது மகளுக்கு காத்து கருப்பு பிரச்சினை உள்ளது, என்னிடம் வந்துவிட்டாய் அல்லவா, இனிமேல் எதுவும் நேராது தைரியமாக இரு என்றார்.

    மேலும் இந்த பிரச்சினைக்கு உனது மகளுக்கு தனிமையில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி அவரை வெளியே காத்திருக்கும்படி செய்தார். பின்னர் மாணவியை மட்டும் தனியாக வீட்டிற்குள் அழைத்து சென்று சிறப்பு பூஜை செய்வதாக கூறி ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவி அதிர்ச்சியில் உறைந்தார். கூச்சல் போடக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அவர் செய்வதறியாமல் அழுது புலம்பினார்.

    அப்போது கோவில் பூசாரி பழனி, இதை வெளியே சொன்னால் சாமி குத்தம் ஆகி செத்து விடுவாய் என மிரட்டினார். இதனால் உயிருக்கு பயந்து அந்த மாணவி நடந்த சம்பவத்தை தாயிடம் அப்போது சொல்லவில்லை. இருந்தபோதிலும் மாணவி அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தார். இதனை கவனித்த அவரது தாய் மீனாட்சி மகளிடம், ஏன் மவுனமாக இருக்கிறாய் என்ன பிரச்சனை என்று கேட்டார்.

    இனி மேலும் விஷயத்தை மறைத்தால் விபரீதமாகி விடும் என்று நினைத்த மாணவி, பூஜை என்ற பெயரில் கோவில் பூசாரி தன்னிடம் அத்துமீறிய சம்பவத்தை கூறினார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மீனாட்சி, கடவுளாக நினைத்த பூசாரி இப்படி ஒரு கயமையை செய்துவிட்டாரே என்று கதறினார்.

    தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக்கூடாது என நினைத்த மீனாட்சி உடனடியாக கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் அந்த மாணவி பூசாரி பாலியல் பலாத்காரம் செய்ததில் மூன்று மாதம் கர்ப்பமாகி இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து கோவில் பூசாரி பழனியை போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தார். வயிற்று வலிக்காக மந்திரித்து விபூதி வாங்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவியை பூசாரி கற்பழித்து கர்ப்பமாக்கி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த பூசாரி பழனி நீண்ட காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விசேஷ பூஜைகள் செய்து வந்துள்ளார். ஆகவே வேறு பெண்களும் அவரால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒருமுறை மட்டுமே மாணவியை சீரழித்ததாக பூசாரி பழனி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகவும், வேறு அவர் மீது எந்த புகாரும் வரவில்லை என்றும், புகார்கள் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பல்வேறு ரூபங்களில் உருவாகி வரும் சூழ்நிலையில் ஆன்மீகத்தின் பேரில் ஏற்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. இதுபோன்ற கயவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் தாமதமின்றி தண்டிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.

    ×