search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்கடை தொழிலாளி"

    • பிரசாத் வீட்டின் அருகே உள்ள ஒரு ஓலை கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.

    நம்பியூர்:

    நம்பியூர் பேரூராட்சி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 27). இவர் நம்பியூரில் உள்ள ஒரு பூக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி நதியா என்ற மனைவியும், ரோகித் என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வெளியே வந்த பிரசாத் அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு ஓலை கொட்டகையில் வெள்ளை வேட்டியால் தனக்குத்தானே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் காலை அக்கம் பக்கத்தினர் ஓலை குடிசை கொட்டகையை பார்த்தபோது அங்கு பிரசாத் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது மனைவி நதியா மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.

    ×