search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புவிசார் குறியீடு"

    • முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கொண்டது.
    • ராமநாதபுரம் முண்டு மிளகாய் வர்த்தக சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் முண்டு மிளகாய் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதற்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. இலங்கை, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் இந்த முண்டு மிளகாய் ஏற்றுமதி செய்யப்ப டுகிறது.

    இதன் மகத்துவம் உணர்ந்து ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய்க்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோது ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்க தலைவர் மங்களசாமி கூறி யதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் தோட்டக்கலை பயிர்களில் 'முண்டு மிளகாய்' ரகமும் ஒன்று என்பதால், அதற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று ராமநா தபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்கம் சார்பில் 2013-ம் ஆண்டு முதல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது புவிசார் குறியீடு கிடைத்து இருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த பெரும் வரப் பிரசாதம்.

    இதன் மூலம் முண்டு மிளகாய் விலை அதிகரித்து விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர்கள் மத்தியில் ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசுக்கு ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்கம் சார்பாக நன்றியை தெரி வித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேலூர் முள்ளு கத்தரிக்காயை சுடலாம், பார்பிக்யூட் செய்யலாம், வறுக்கவும், வேகவைக்கவும் அல்லது ஊறுகாய்களாகவும் செய்யலாம்.
    • ராமநாதபுரம் குண்டு மிளகாய் இலங்கை, நேபாளம், அமெரிக்கா, ஐரோப்பா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக விளையும் வேலூர் இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு (ஜி.ஐ) புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம், புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மொத்த தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்து, மாநிலம் 2-வது இடத்தில் உள்ளது. கர்நாடகா 46 அதிகபட்ச புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளது. கேரளா 36 தயாரிப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    தமிழில் இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய் என்று அழைக்கப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி, ஒரு அரிய, முட்கள் நிறைந்த நாட்டு கத்தரிக்காய் இனமாகும்.

    இளஞ்சிவப்பு நிறத்துடன் கலந்த ஊதா நிறத்தில் பளபளப்பாக காணப்படும். ஒரு கத்தரிக்காயின் சராசரி எடை 40 கிராம் ஆகும், மேலும் அறை வெப்பநிலையில் 3 நாட்களும், குளிரூட்டப்பட்ட சுற்றுப்புறத்தில் சுமார் 8 நாட்களும் இருக்கும்.

    புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது மற்ற கத்தரி வகைகளை விட சுவையாக இருக்கும்.

    பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்க்கும் தனி சக்தி இதற்கு உண்டு. செடியின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் முட்கள், பயிரை மிகவும் தனித்துவமாகவும், அடையாளம் காணக்கூடியதாகவும் ஆக்குகின்றன.

    இது மென்மையாகவும், சதைப்பற்றுள்ளதாகவும் உள்ளது. மேலும் இது கொத்தாகத் தொங்கும் இது 140-150 நாட்களில் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 40-45 டன்கள் மகசூல் தரும்.

    வேலூர் முள்ளு கத்தரிக்காயை சுடலாம், பார்பிக்யூட் செய்யலாம், வறுக்கவும், வேகவைக்கவும் அல்லது ஊறுகாய்களாகவும் செய்யலாம்.

    இது பிரியாணி, பிரிஞ்சி சேர்வா, சாம்பார், பொரியல் மற்றும் மாலை நேர சிற்றுண்டிகளுடன் விருப்பமான உணவாகும்.

    இது அதிக வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையை தாங்கும் திறன் கொண்டது.

    "முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வேலூர் உழவர் சந்தை தொடங்கி வைக்கும் போது, குறிப்பாக வேலூர் முள்ளங்கி கத்தரிக்காயை குறிப்பிட்டு, அதன் அரிய குணங்களை விவரித்தார்.

    ராமநாதபுரம் குண்டு மிளகாய் தமிழில் 'கொழுப்பு மற்றும் உருண்டை' என்று பொருள்படும், கேபிசுமன்னம் இனத்தைச் சேர்ந்தது.

    இது தென்னிந்திய உணவு வகைகளில் பிரபலமான ஒரு குண்டு வடிவ மிளகாய். இது கருமையான பளபளப்பான மற்றும் அடர்த்தியான தோலைக் கொண்டுள்ளது.

    திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், கடலாடி மற்றும் கமுதி பகுதிகளில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான சாகுபடி செய்து வருகின்றனர். அதன் செழுமையான சுவை நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    ராமநாதபுரம் குண்டு மிளகாய் இலங்கை, நேபாளம், அமெரிக்கா, ஐரோப்பா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    • ஈரோடு கவுந்தபாடி பகுதியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் நாட்டுச்சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லாணிப் பகுதிகளில் சித்திரைகார் நெல்வகை சாகுபடி செய்யப்படுகிறது.

    சென்னை:

    உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் பாரம்பரியப் பண்புகள், தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டார்ஜிலிங் தேநீர், மைசூர் பட்டு, தமிழகத்தின் தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றை பிற பகுதியினர் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக இந்தியாவில் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்டது.

    உலக வர்த்தக மையத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்லாது, உலக அளவில் பொருட்களுக்கு இங்கு விண்ணப்பித்து புவிசார் குறியீடு பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசின் கீழ் செயல்படும் இதற்கான அலுவலகத்தின் தலைமையகம் சென்னை கிண்டியில் இருக்கிறது.

    இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பொருளுக்கான உரிமை மற்றும் தொழில் பாதுகாப்பை பெற முடியும். டெல்லியிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ ஒரு பட்டுப் புடவையை நெய்து, அதனை 'காஞ்சிப் பட்டு' என்று விற்க முடியாது. தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்து விளக்குகள், கும்பகோணம் வெற்றிலை, மதுரை மல்லி, கொடைக்கானல் வெள்ளைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் என ஏராளமான பொருட்களுக்கு 'புவிசார் குறியீடு' கிடைத்துள்ளது.

    தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சார்பாக கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை, ராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி மற்றும் சேலம் கண்ணாடி கத்திரி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கேட்டு சென்னையில் உள்ள புவியியல் குறியீடுகள் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

    இந்தப் பொருட்கள் உற்பத்தியாகும் உள்ளூர் சங்கங்கள் இணை விண்ணப்பதாரர்களாகவும், நபார்டு மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் பார்ம் ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன. வக்கீல் சஞ்சய் காந்தி மூலம் இந்த விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு கவுந்தபாடி பகுதியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் நாட்டுச்சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். பரம்பரை பரம்பரையாக நாட்டுச் சர்க்கரை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள், தங்களுக்கென சொந்தமாக உள்ள நிலத்தில் கரும்பு பயிரிட்டு, அந்த கரும்பை தங்களின் சொந்த ஆலையிலேயே ஆட்டி, அந்த கரும்பு பாலில், தூய கலப்படமில்லாத நாட்டுச் சர்க்கரையை தயாரிக்கின்றனர். பழனி பஞ்சாமிர்தம் ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்ற நிலையில் அந்த பஞ்சாமிர்தத்தை ருசிக்க செய்வது கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரையே.

    ராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லாணிப் பகுதிகளில் சித்திரைகார் நெல்வகை சாகுபடி செய்யப்படுகிறது. இதுவே ஆரம்பகால சிவப்பு அரிசி வகை என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது. 1964-ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தின்போது நெல் வகை முற்றிலும் அழிந்த நிலையில் அதன்பின், அருகில் உள்ள சிக்கல் கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, தற்போது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகை அரிசி கஞ்சி பல மணி நேரம் பசியைத் போக்குகிறது.

    சேலம் கண்ணாடி கத்திரிக்கு விண்ணப்பித்த சேலம் விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-

    சேலம், ஈரோடு பகுதிகளில், வாழப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேச்சேரி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்படுகிறது. அது பளபளப்பாகவும் ஊதா நிறமாகவும் இருந்தது. இந்த குறிப்பிட்ட கத்திரிக்காய் மெல்லிய தோல் மற்றும் அதிக அளவு சதை கொண்டது. அதிக விதைகள் இருந்தாலும், அவை மென்மையாகவும், உணவில் சுவையை கூட்டுவதாகவும் உள்ளது.

    • தலையாட்டி பொம்மை, வீணை, நரசிங்க ம்பேட்டை நாதஸ்வரம், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உள்பட 10 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது.
    • இன்னும் 24 வகையான பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தலையாட்டி பொம்மை, வீணை, நரசிங்க ம்பேட்டை நாதஸ்வரம், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உள்பட 10 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது.

    இந்த கண்காட்சி நாளை வரை (21-ந் தேதி) நடைபெறுகிறது.

    இந்த கண்காட்சியை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும். இன்னும் 24 வகையான பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு ள்ளார்.

    மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி செய்து வருகிறோம்.

    பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பாரம்பரிய புவிசார் குறியீடு பெற்ற பொருட்களையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி., துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×