search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புவிசார் குறியீடு"

    • ஐதராபாத்தின் லாட் பஜாரில் விற்பனை செய்யப்படும் வளையல்.
    • தெலுங்கானாவில் புவிசார் குறியீடு பெறும் 17வது பொருள் இதுவாகும்.

    ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்பட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் லாட் பஜாரில் விற்பனை செய்யப்படும் லாக் (Lac) வகை வளையல்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

    அதன்படி, தெலுங்கானாவில் புவிசார் குறியீடு பெறும் 17வது பொருள் இதுவாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
    • புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்ட இந்த சட்னி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.

    புவனேஸ்வர்:

    ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்பட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    புரதம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள இந்த சட்னி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. மேலும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கிறது.

    புவிசார் குறியீடு அங்கீகாரமானது அந்தப் பொருளின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அப்பொருளை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது.

    • சேவூர் நிலக்கடலை சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் ஏக பிரசித்தி பெற்றது
    • சிறு, குறு விவசாயிகளுக்கு பெரிய பொருட்செலவு இல்லை.

    அவிநாசி:

    சேவூர் சுற்றுவட்டார பகுதி மழை மறைவு பிரதேசம். இப்பகுதியில் வறட்சியை தாங்கி வளரும் பயிர்களில் முதன்மையான இடம்பிடித்திருப்பது நிலக்கடலை. சேவூர் நிலக்கடலை சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் ஏக பிரசித்தி பெற்றது. பனை மரம் போல் வறட்சியை தாங்கி வளரும் ஒரு உன்னத பயிராக விவசாயிகள் இன்றும் இதனை கருதி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடுகோரி இப்பகுதி விவசாயிகள் கடந்த வாரம் அவினாசி வந்த மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயலிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

    இது குறித்து சேவூர் பகுதி நிலக்கடலை விவசாயிகள் கூறியதாவது:-

    சேவூர், குட்டகம், தண்ணீர்பந்தல்பாளையம், போத்தம்பாளையம், தாமரைக்குளம், பாப்பான்குளம், முறியாண்டாம்பாளையம், கானூர், நடுவச்சேரி, வடுகபாளையம், மங்கரசுவலையபாளையம், தண்டுக்காரன்பாளையம், ராமியம்பாளையம் என 30 கி.மீ. சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை விவசாயம் நடந்து வருகிறது. வறட்சியை தாங்கி வளர்வதால் இப்பகுதி விவசாயிகளின் விருப்பத்தேர்வாக இந்த நிலக்கடலை சாகுபடி உள்ளது. மழை பெய்யும் போது கிடைக்கும் நிலத்தடி நீர் மற்றும் நீராதாரத்தை கொண்டு விளையும் மானாவாரி பயிர் என்பதால், பலரும் இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    சிறு, குறு விவசாயிகளுக்கு பெரிய பொருட்செலவு இல்லை. குறிப்பாக செம்மண் கலந்த சரளை மண் என்பதால், மண்ணில் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே உள்ளது. அதேபோல் விளையும் கடலைச்செடியிலும் பருப்புகள் மிகவும் உருப்படியாகவும், தரமாகவும் மற்றும் சத்து நிறைந்து ஆரோக்கியமாக இருப்பதால், இங்கு உற்பத்தி செய்யும் கடலைக்கு ஏக மவுசு. அதேபோல் கடலை பருப்பி, கடலை எண்ணெய் மற்றும் வறுகடலைக்கு இந்த கடலைகள் நன்கு சுவையாகவும், இயற்கையாகவும் விளையும் தன்மை கொண்டதால் மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. அதேபோல் சுவையுடன், சத்தும் சேர்ந்திருப்பதால் பலர் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    அதேபோல் கடலை எண்ணெய்யை பல்வேறு மாவட்டங்களில் இருந்து, இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். அதேபோல் உழவர் உற்பத்தியாளர் கூட்டுப்பண்ணை நிறுவனம் மூலம் மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி, விவசாயிகள் பலர் பயன்பெற்று வருகின்றனர். மானாவாரி விவசாயம் என்றால் ஆண்டுக்கு ஒருமுறையும், கிணற்று பாசனம் என்றால் ஆண்டுக்கு இருமுறையும் விளைவிப்போம். 100 நாட்கள் தான் இதன் அறுவடை காலம். எங்கள் கோரிக்கையை ஏற்று, திருப்பூர் மாவட்டத்தில் குறுகிய நிலப்பரப்பில் விளையும் சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கி, சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சேவூர் நிலக்கடலை இந்த பகுதியில் 4600 ஏக்கரில் விளைவிக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் வரை கிடைக்கும். ஒரு கிலோ மூட்டை 60 கிலோ ஆகும். நல்ல தரமான, சுவையான, சத்தான பருப்பாக இங்கு விளையும் கடலை இருப்பதால் பொதுமக்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டுதல்களின் படி, மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்பனை நடைபெறுகிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.

    சேவூர் கடலை மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் வெகு பிரசித்தம். இதனை நாடும் நுகர்வோர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். புவிசார் குறியீடு கோரி விவசாயிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர். இதனை அரசு தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • உடன்குடி பகுதியில் உள்ள காரத்தன்மை உள்ள மணலினால் இங்குள்ள பனைகளில் கிடைக்கும் பதனீர் தனிச்சுவையாக இருக்கும்.
    • உடன்குடி கருப்பட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தற்போது புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    உடன்குடி:

    ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் உடன்குடி புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் உள்ள காரத்தன்மை உள்ள மணலினால் இங்குள்ள பனைகளில் கிடைக்கும் பதனீர் தனிச்சுவையாக இருக்கும். மேலும் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டி, கற்கண்டு ஆகியவற்றிக்கு தனிச்சுவையும், மருத்துவ குணமும் உண்டு. எனவே உலகம் முழுவதும் உடன்குடி பனங்கருப்பட்டிக்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது.

    தனிச்சிறப்பு கொண்ட இந்த கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பனைத் தொழிலாளிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியும், உடன்குடி பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இந்நிலையில் உடன்குடி கருப்பட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தற்போது புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உடன்குடி பகுதியில் உள்ள விவசாயிகள், பனைத்தொழிலாளர்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த அமைப்பினர், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் உடன்குடி வட்டார பனங்கருப்பட்டி, கற்கண்டு தயாரிப்பாளர்கள் நல அமைப்பு சார்பில் அதன் தலைவர் சந்ரசேகரன் தலைமையில் செயலாளர் ஷேக்முகமது முன்னிலையில் உடன்குடி மெயின் பஜாரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

    இதில் பொன்ஸ்ரீராம், தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்க நிறுவனர் முகைதீன், வாடாப்பூ, சமூக ஆர்வலர் அசோக் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேறு எந்த வகை வாழைப்ப ழத்திலும் மட்டி மாதிரி மணம் வீசுவது இல்லை.
    • பச்சிளம் குழந்தைகள் முதல், நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிடுவது வழக்கம்.

    திருவட்டார் :

    கன்னியாகுமரி மாவட்ட த்தில் வாழை விவசாயம் அதிக அளவில் நடை பெறுகிறது. செவ்வாழை, நேந்திரம், பாளையங்கோ ட்டை, பேயன், ரஸ்தாளி, சிங்கன், பூவன் மற்றும் மருத்துவ குணம் கொண்ட மட்டி உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழை ரகங்கள் பயிரிடப்படு கின்றன. மட்டி வாழை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆரம்ப த்தில் விளைந்த காட்டு ரக வாழை ஆகும். அது மெல்ல மெல்ல நாட்டுப்ப குதிகளுக்கும் பரவியது. மட்டியின் சிறப்பே அதன் ருசியும், மணமும் தான். வேறு எந்த வகை வாழைப்ப ழத்திலும் மட்டி மாதிரி மணம் வீசுவது இல்லை.

    முன்பு பேச்சிப்பாறை, குலசேகரம், அருமனை உள்ளிட்ட மலைப்பகுதி களில் மட்டுமே மட்டி வாழைக்கு லைகள் அதிகமாக விற்பனைக்கு வரும். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மட்டி வாழைக்குலைகள் அதிகமாக பயிரிடுகி றார்கள். இதனால் எப்போதும் சந்தையில் கிடைக்கும் பழ ரகங்களில் ஒன்றாக மட்டி விளங்குகிறது.

    மாவட்டத்தில் நடைபெறும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நடத்தும் நிகழ்ச்சிகளில் மட்டி வாழைப்பழமும், முந்திரிப்பருப்பும் தவறாமல் இடம்பெறும். மருத்துவ குணம் கொண்ட மட்டி ரக வாழைப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை என்பதால், பச்சிளம் குழந்தைகள் முதல், நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிடுவது வழக்கம். இந்த வாழைப்பழத்தின் தோல், பொதுவாக மஞ்சள் நிறத்தில் தான் காணப்படும். மட்டி வாழை மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூ டியது.

    வாழைத்தார்களில் வாழைக்காய்கள் நெருக்கமாக இருக்கும். இனிப்பு சுவையும். மணமும் கொண்டதாக மட்டி வாழைப்பழம் இருப்பதால் குமரி மாவட்டத்தில் மட்டிப்பழத்தை குழந்தைக ளுக்கு மிகவும் விரும்பி அளி ப்பார்கள். குழந்தைகளுக்கு முதல் முதலில் மட்டி வாழைப்ப ழத்தை நசுக்கி கொடு க்கும் பழக்கம் இன்றும் உள்ளது.

    மட்டி வாழையை நட்டு 11 முதல் 12 மாதங்களில் குலையை அறுவடை செய்யலாம். தார்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150 பழங்கள் இருக்கும். ஒவ்வொரு தாரும் 12 கிலோ முதல் 15 கிலோவும் அதற்கு மேலும் எடை இருக்கும். ஒவ்வொரு பழமும் 40 கிராம் முதல் 60 கிராம் எடை இருக்கும். ரஸ்தாளி பழம் போலவே தோற்றமளிக்கும் மட்டிப்பழத்தின் நுனிப்பகுதி சற்று நீண்டிருக்கும். மட்டி வாழைப்பழம் அளவில் சிறியது. மட்டிப்பழம் பற்றிய நிகழ்வு ஒன்றும் சரித்திரத்தில் இடம்பெ ற்றுள்ளது.

    தற்போது இந்த மட்டி பழத்துக்கு அரசு புவிசார் குறியீடு கொடுத்திருப்பதை தொடர்ந்து அதன் விலை ரூ.160-க்கு விற்பனை ஆகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வித்தியாசமான ருசியை கொண்ட இந்த மஸ்கோத் அல்வா பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
    • தூத்துக்குடி முதலூருக்கு வந்து இங்கு தேங்காய்பால் அல்வா செய்து விற்பனை செய்த தொடங்கினார்.

    நெல்லை:

    உலக அளவில் புகழ் பெற்றது நெல்லை அல்வா. ஆனால் அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் முதலூரில் தயார் செய்யப்படும் மஸ்கோத் அல்வா அதற்கு போட்டியாக பொதுமக்களால் விரும்பப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் தேங்காய்ப் பாலில் செய்யும் அல்வா சிறப்பு பெற்றது. மஸ்கட்டில் இருந்து இலங்கைக்கு சென்றவர்கள் இந்த அல்வாவின் மணத்தை இலங்கைக்குப் பரப்ப, அங்கிருந்து புலம் பெயர்ந்த முதலூர்காரர்கள் நெல்லை, தூத்துக்குடிக்கு இந்த அல்வாவை செய்து கொடுக்க, இன்று முதலூர் மண்ணின் முக்கியத் தொழிலாகி விட்டது மஸ்கோத் அல்வா.

    1966-ம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது மஸ்கோத் அல்வா வரலாறு. ஜோசப் ஆபிரகாம் என்பவர் தேங்காய்ப்பாலுடன் முந்திரி பருப்பு, சுத்திகரிக்கப்பட்ட கோதுமை, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை கொண்டு மஸ்கோத் அல்வா தயார் செய்தார். வித்தியாசமான ருசியை கொண்ட இந்த மஸ்கோத் அல்வா பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது பல ஆண்டுகளை கடந்து ஜோசப் ஆபிரகாம் அவரது மகன் ஜெயசீலன் என தொடர்ந்து இந்த அல்வா தொழில் ஈடுபட்ட நிலையில் அவரது பேரன் சைமன் ஐசக் என்பவர் தற்போது இதனை நடத்தி வருகிறார்.

    இது குறித்து அவர் கூறும்போது, எனது தாத்தா தனது மூத்த மகள் தேவகனியுடன் சேர்ந்து இலங்கையில் வசித்த போது இந்த அல்வாவை பற்றி அறிந்தார். பின்னர் அவர் தூத்துக்குடி முதலூருக்கு வந்து இங்கு தேங்காய்பால் அல்வா செய்து விற்பனை செய்த தொடங்கினார். நாளடைவில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இன்று முதலூர் அல்வா என்றால் நாடு முழுவதும் தெரியும் படி மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது.

    தற்போது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏறுப ஆன்லைன் மூலமும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. எனினும் அதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படவில்லை.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    கடைசியாக திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, வீரமாங்குடி செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அந்த வரிசையில் முதலூர் மஸ்கோத் அல்வாவிற்கும் புவிசார் குறியீடு வழங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் மஸ்கோத் அல்வாவிற்கும் புவிசார் குறியீடு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

    • ஜடேரி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் 300 ஆண்டுகளாக நாமக்கட்டிகளை தயாரித்து வருகின்றனர் ‌.
    • கன்னியாகுமரி மாவட்டம் வாழை சாகுபடியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டு வக்கீலும், அறிவு சார் சொத்துரிமை அட்டார்னியுமான சஞ்சய் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புவிசார் குறியீடு ( பதிவு மற்றும் பாதுகாப்பு ) சட்டம் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்டு 2003-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

    இந்தியாவில் 450-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே 55 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்தது.

    இன்று செடிபுட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனையும் சேர்த்து தமிழ்நாட்டில் மட்டும் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற 2 ஆண்டுகளிலே 17 பொருட்களுக்கு அரசு வழக்கறிஞரான நான் புவிசார் குறியீடு அங்கீகாரத்தைப் பெற்று கொடுத்துள்ளேன். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் போலீசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்த முதல் இடத்தில் உள்ளது.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவாநல்லூர் சவுராஷ்ட்ரா நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் சார்பில் செடிபுட்டா சேலைக்கு புவிசார் குறியீடு அதிகாரம் கேட்டு விண்ணப்பித்திருந்தேன். 2 ஆண்டுகள் பரிசோதனைக்கு பிறகு இன்று செடிபுட்டா சேலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த சேலையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அணியும்போது குளிர்காலத்தில் வெப்பமாகவும், கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் 300 ஆண்டுகளாக நாமக்கட்டிகளை தயாரித்து வருகின்றனர் . இது முக்கியமாக திருநாமத்தை பயன்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக நாமக்கட்டிக்கு சப்ளை செய்து வரும் ஒரே கிராமம் ஜடேரி. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஜடேரி நாமக்கட்டிக்கு இன்று புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

    கன்னியாகுமரி மாவட்டம் வாழை சாகுபடியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு வகையான வாழைப்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. அதில் மட்டி வாழைப்பழம் புகழ் பெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டத்தில் அதிகளவில் மட்டி வாழைப்பழம் பயிரிடப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் வாய்ந்த இந்த கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்திற்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

    இதன் மூலம் தமிழ்நாட்டில் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திண்டுக்கல் மாவட்டம் வெயில், மிதமான வெயில், குளிர் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு தட்பவெட்ப ங்களை கொண்ட மாவட்டமாகும்.
    • தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைக்க பெற்று அதன் அங்கீகார சான்றி தழை கொடைக்கானல் மேல்மலை விவசாய சங்கங்களுக்கு வழங்கும் விழா கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

    கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலா, சென்னை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டம் வெயில், மிதமான வெயில், குளிர் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு தட்பவெட்ப ங்களை கொண்ட மாவட்டமாகும். கொடைக்கானல் பகுதியில் விளையவைக்கும் பூண்டிற்கு உலக அளவில் தனித்துவம் பெற்று மருத்துவ குணத்துடன் இருந்து வருகிறது. இப்பூண்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொடைக்கா னல் மலைப்பூண்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இது இப்பகுதி விவசாயிகளுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகளும் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது.

    கொடைக்கானல் மலைப்பூண்டின் மகத்துவம் மற்றும் மலைப்பூண்டின் மருத்துவ குணத்தினை உணர்ந்து மலைப்பூண்டு ஊறுகாய், மலைப்பூண்டு மாலை உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு பொருட்களை விவசாயிகள் தயார் செய்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் அதற்கு விவசாய கடன் மானியத்துடன் வழங்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    இவ்விழாவில் கொடைக்கானல் மலைக்கிராம விவசாயிகள் மலைப்பூண்டினால் உருவாக்கப்பட்ட மாலையை கலெக்டருக்கு வழங்கினர்.

    மலைப்பூண்டிற்கு கிடைக்கப்பெற்ற புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழை கொடைக்கானல் மேல்மலை விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மலைக்கிராம விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் விசாகன் வழங்கினார்.

    இவ்விழாவில், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் சீலா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாராதேன்மொழி, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் நாட்ராயன், செல்லய்யா, பாலகிரு ஷ்ணன், தனமுருகன், கோபால்சாமி, அருள்ஜோதி, கொடைக்கானல் மேல்மலை விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இணை யதளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
    • கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்கியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்கு றிச்சி, தென்கீரனூர், ஜே.ஜே நகர், சின்னசேலம், நைனார்பாளையம், தகடி, கூத்தனூர், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டு காலமாக மரச் சிற்பங்களை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மரத்தாலான சாமி சிற்பங்கள், பூஜை அறைக்கு தேவையான சிற்பங்கள், கோவில் மற்றும் பூஜை அறை கதவு, கோவில் தேர் உள்ளிட்ட கலை அழகு மிகுந்த மரச் சிற்பங்கள் செய்யப்படுகிறது. இந்த மரச்சிற்பங்களை தமிழகத்தைச் சேர்ந்த பலரும் வாங்கிச் செல்கின்றனர். அது மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இணை யதளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில வெளிநாட்டவர்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்த மரச்சிற்ப தொழிலுக்கு கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்கியது.

    இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மர சிற்பம் செதுக்கும் கலைஞர்களுக்கு அவர்களின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் ரூ.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் நவீன தொழில்நுட்ப எந்திரங்களைக் கொண்ட ஒரு பொது வசதி மையம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மரச் சிற்ப தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் தயாரிப்பு கைவினைத் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல் கூறியதாவது,

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மரச் சிற்பம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் மரச் சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக, கலைவண்ணம் மிகுந்து காணப்படும். இதனால் மரச்சிற்பத்திற்கு தமிழக அரசின் புவிசார் குறியீடை பெற்றுள்ளோம். இங்கு தயாரிக்கப்படும் மரச்சிற்பங்கள் ரூ. 3 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசு மர சிற்ப தொழிலாளிகள் பயனடையும் வகையில் ரூ. 50 லட்சம் மதிப்பில் தொழில்நுட்ப எந்திரங்களை கொண்ட வசதி மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் பயனடைவார்கள் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். எனவே இந்த அறிவிப்பு மரச்சிற்ப தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என கூறினார்.

    • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகு, மற்ற பகுதி மிளகுகளை காட்டிலும் காரத்தன்மை அதிகம் கொண்டதாகும்.
    • கொல்லிமலையில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிளகு பயிரிடப்பட்டு உள்ளன.

    நாமக்கல்:

    ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்த குறியீடு அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்.

    தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுச்சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மரச்சிற்பம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, பத்தமடை பாய் உள்ளிட்ட பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. சேலம் ஜவ்வரிசி உள்பட 11 பொருட்களுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரை தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகு, மற்ற பகுதி மிளகுகளை காட்டிலும் காரத்தன்மை அதிகம் கொண்டதாகும். எனவே கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது அங்கு வாழும் பழங்குடியின விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். இதற்கான நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படும் கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 4,663 அடி உயரம் கொண்டது. 280 சதுர கி.மீட்டர் பரப்பளவை கொண்ட இந்த மலைப்பகுதியில் 14 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் மா, பலா, வாழை, அன்னாசி, மிளகு, நெல், மரவள்ளி, சிறு தானியங்கள் பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர்.

    இதில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குவது கொல்லிமலை மிளகு. கொல்லிமலையில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிளகு பயிரிடப்பட்டு உள்ளன.

    சில்வர்ஒக் மரங்களில் ஊடுபயிராக பரவ விடப்படும் மிளகு கொடிகள் வளர்ந்து பருவநிலையை எட்ட 4 ஆண்டுகள் வரை ஆகும். அறுவடைக்கு ஏற்றவாறு மிளகு கொடி படர்ந்து விட்டால், குறைந்தபட்சம் 15 முதல் 18 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    மிளகு வகைகளில் பன்னியூர்1, கரிமுண்டா, பன்னியூர்5 ஆகியவை இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. கொல்லிமலை மிளகிற்கு புவிசார் குறியீடு கிடைக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மிளகு வளர்ப்பிற்கான சீதோஷ்ண நிலை கொல்லிமலை பகுதியில் நன்றாக உள்ளது. இங்கு பன்னியூர் மற்றும் கரிமுண்டா ரக மிளகுகள் விளைந்து வருகிறது. இருந்தபோதிலும் பன்னியூர் ரகமே அதிக அளவில் காணப்படுகிறது. மலைவாழ் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக செம்மேடு மற்றும் பவர்காடு பகுதியில் தலா ஒரு மிளகு சேமிக்கும் குளிர்பதன கிடங்கை அமைத்து கொடுக்க வேண்டும்.

    கொல்லிமலையில் இயற்கை விவசாய முறையில் மிளகு விளைவிக்கப்படுவதால் இங்குள்ள மிளகிற்கு புவிசார் குறியீடு கிடைத்தால், சீரான விலை கிடைக்கவும், ஏற்றுமதி அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும் என்கின்றனர் விவசாயிகள்.

    • இந்தியாவில் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது.
    • இந்தியாவிலேயே புவிசார் குறியீடு அதிக அளவில் பெற்றுள்ள மாநிலமாக முதல் இடத்தில் தமிழ்நாட்டில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு உள்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞருமான சஞ்சய்காந்தி கூறினார்.

    இது தொடர்பாக அவர் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    இந்தியாவில் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது.

    தமிழ்நாட்டில் ஏற்கனவே தஞ்சாவூர் வீணை, பொம்மை ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்பட 45 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    அந்த வகையில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு , ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கு ஏற்கனவே விண்ணப்பிக்கபட்டது.

    பல ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு செய்து இந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டோம். அனைத்து ஆய்வுகளும் முடிந்த பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. 4 மாதங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. மேற்கூறிய 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைப்பதில் எந்தவித எதிர்ப்பும் இல்லாததால் அந்த பொருட்கள் அனைத்தும் சட்டப்படி புவிசார் குறியீடு பெற்றதாக அறிவிக்கப்படும். இன்று அரசு அது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடும். இதன் மூலம் 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 15-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்துள்ளது. அந்த பொருட்களுக்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும்.

    புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம் அந்த பொருள் தனி தன்மை பெறுகிறது. வெளிநாடுகளுக்கும் எளிதாக ஏற்றுமதி செய்யலாம். பொருட்களை தயாரிப்பவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக பார்க்கப்படுவர். அவர்களுக்கு அதிகளவில் லாபம் கிடைக்கும். இன்று கிடைக்கும் 11 பொருட்களையும் சேர்த்து தமிழ்நாட்டில் மட்டும் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே புவிசார் குறியீடு அதிக அளவில் பெற்றுள்ள மாநிலமாக முதல் இடத்தில் தமிழ்நாட்டில் உள்ளது.

    இரண்டாம் இடத்தில் கர்நாடகம், மூன்றாவது இடத்தில் உத்தரபிரதேசம் மாநிலம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புவிசார் குறியீடு ஊட்டி வர்க்கிக்கு கிடைப்பது ஊட்டியின் பாரம்பரியத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுகிறது.
    • ஊட்டி வர்க்கியுடன் சேர்த்து அதே நாளில் மணப்பாறை முறுக்குக்கும் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி சுற்றுலா தலங்களுக்கு மட்டும் பிரபலமானது அல்ல. நீலகிரியில் கிடைக்கும் சுவையான, மொறு மொறுப்பான வர்க்கிக்கும் பிரபலமானது தான்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் விருப்பமான ஒரு நொறுக்கு தீனியாகவே இது இருந்து வருகிறது.

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே இதனை வாங்காமல் மலையை விட்டு இறங்குவது கிடையாது. அந்தளவுக்கு இந்த வர்க்கி அனைவர் மத்தியிலும் பிரபலம் அடைந்துள்ளது.

    இப்படி பிரபலமான இந்த வர்க்கி எப்படி உருவானது என்பதை பார்க்கலாம். ஆங்கிலேயேர்கள் ஆட்சியில் அவர்கள், அதிகமான பேக்கிங் பொருட்களை தயாரித்து உட்கொண்டனர். அப்படி அவர்கள் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதான் குக்கிஸ் (பிஸ்கெட்). அது அவர்களின் பிரதான நொறுக்குத்தீனியாகவே இருந்தது.

    காலையில் நீலகிரியின் மணம் கமழும் தேநீரோடு, சில, பல குக்கிகளை விழுங்குவது, அவர்களது வழக்கம். அப்போது அவர்களிடம் பணியாற்றிய சில சமையல்காரர்கள், அந்த பிஸ்கட்டை அடிப்படையாக வைத்து புதுச்சுவையில் ஒரு வகை நொறுக்குத்தீனியை உருவாக்கினர்.

    அந்த நொறுக்குத்தீனி தான் வர்க்கி. மொறுமொறுவென்று இருந்த அதன் புதுச்சுவை ஆங்கிலேயர்களுக்கு பிடித்து போக தற்போது அது நீலகிரியின் அடையாளமாகவே மாறி விட்டது.

    குக்கிஸ் பொருளுக்கு மாற்றாக, 'வற வற' என, இருந்ததால், அந்த தின்பண்டம் 'வறக்கிஸ்' என முதலில் அழைக்கப்பட்டது. பின்பு வர்க்கி என பெயர் மருவியது. ஆங்கிலேயர் காலத்தில், நெய் கலந்த மாவு பொருளை, நெய்யில் வறுத்து எடுத்ததால் இதற்கு வர்க்கி' என்ற பெயர் வந்தது என மற்றொரு தகவலும் உண்டு.

    நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் வர்க்கிகள், தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. அங்குள்ள பேக்கரிகள், டீ கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் விற்கப்படுகின்றன.

    உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இந்த ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு பெற அதன் உற்பத்தியாளர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வந்தனர். தற்போது அவர்களின் முயற்சியின் பலனாக ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    பல கட்ட ஆய்வுக்கு பின் கடந்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி புவிசார் குறியீடு இதழில் ஊட்டி வர்க்கிக்கு, புவிசார் குறியீடுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்குள் அதாவது மார்ச் 30-ந் தேதிக்குள் இதற்கு ஆட்சேபம் எழுந்தால் அந்த விண்ணப்பம் மறுபரிசீலனைக்கு உள்ளாகும்.

    இல்லாவிடில் அந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விடும். அதன்படி வருகிற 31-ந் தேதியில் இருந்து ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு என்கிற மகத்தான அங்கீகாரம் கிடைக்க உள்ளது.

    புவிசார் குறியீடு ஊட்டி வர்க்கிக்கு கிடைப்பது ஊட்டியின் பாரம்பரியத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுகிறது. மேலும் ஊட்டியை தவிர வேறு எங்கு தயாரிக்கும் வர்க்கியையும் ஊட்டி வர்க்கி என்ற பெயரில் விற்பனை செய்வதை, சட்டப்பூர்வமாக தடுக்க முடியும்.

    இதுகுறித்து வர்க்கி உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் முகம்மது பரூக் கூறும் போது, ஊட்டி வர்க்கிக்கு கிடைக்கும் இந்த அங்கீகாரம் எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இதனை தரமானதாக தயாரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை இந்த அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஏற்கனவே குறியீடு பெற்றுள்ள ஊட்டி டீயுடன் வர்க்கியும் சேர்வது இணையற்ற சுவையாக அமைய உள்ளது என்றார்.

    இதேபோல் ஊட்டி வர்க்கியுடன் சேர்த்து அதே நாளில் மணப்பாறை முறுக்குக்கும் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது. இது தமிழகத்தின் பாரம்பரிய உணவு பொருளுக்கான பெருமையை உலகறிய செய்யும். இவற்றுடன் மண்பாண்டத்துக்கு பெயர் பெற்ற மானாமதுரையில் தயாரிக்கப்படும் இசைக்கருவியான கடம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தயாராகும் கைவினை பொருளான மயிலாடி கல் சிற்பங்களுக்கும் புவிசார் குறியீடு என்ற பெருமை கிடைக்க உள்ளது.

    ×