search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமை பெண் திட்டம்"

    • குமரி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக வழங்கப்படுகிறது
    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில்:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட் டத்தின் கீழ் அரசு பள்ளி களில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் 2-வது கட்ட தொடக்க விழா நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    குமரி மாவட்டத்தில் இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி வைத்தார். சமூக நல அதிகாரி சரோஜினி வரவேற்று பேசினார்.

    விழாவில் மாணவ மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.இதைத் தொடர்ந்து 981 மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.

    விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    புதுமைப்பெண் திட்டம் என்பது மிக முக்கிய மான திட்டம் ஆகும். பெண் குழந்தைகள் கல்வி இடைநில்லாமல் தடுப்பதற்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சில இடங் களில் திருமணங்கள் நடைபெறும். அதை தடுப்பதற்கும் இந்த திட்டம் உதவும். இந்த திட்டத்தை மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்ஜினீயரிங், மருத்து வம் தவிர பல்வேறு படிப்பு கள் உள்ளது. சட்டம், வேளாண்மை போன்ற படிப்புகள் எல்லாம் உள்ளது. தற்போது நுழைவுத் தேர்வு எழுதுவதிலும் மாணவிகள் கவனம் செலுத்தி தங்களது திறமைகளை வெளிக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மாணவிகளிடமும் ஒவ்வொரு திறமைகள் உள்ளது. தங்களது திறமைகளை நீங்கள் வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகை யில் இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெறும் மாணவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது

    அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி பெறும் மாணவிகள் இணைய தளம் வாயிலாக இந்த உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம். புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக குமரியில் முதல் கட்டமாக 1987 பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக 981 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., பத்மநாபபுரம் சப்- கலெக்டர் கவுசிக், கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, ஸ்காட் கல்லூரி முதல்வர் எட்வர்ட், மருத்துவ கல்லூரி முதல்வர் பிரின்ஸ்பயஸ், முன்னோடி வங்கி மேலாளர் பீரவின்,கவுன்சிலர் கவுசிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேவதாஸ் நன்றி கூறினார்.

    • மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.
    • இதுவரை தமிழகத்தில் 2, 3 மற்றும் 4-ஆம் ஆண்டில் பயிலும் 1.13 இலட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.

    இதுவரை தமிழகத்தில் 2, 3 மற்றும் 4-ஆம் ஆண்டில் பயிலும் 1.13 இலட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். தற்போது https://pudhumaipenn.tn.gov.in என்ற வலைத்தளத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வலைத்தளத்தில், மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டதிற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ஆம் நாள் வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும், மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக எமிஸ் எண், மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்போது 2,3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கும் சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும், விண்ணப்ப முறையினை சரியாகத் தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மட்டுமே தகுதியானவர்கள்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து, மேல்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்டது.

    இதுவரை 2, 3, 4-ம் ஆண்டில் படிக்கும் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பயன்பெற்று வந்தனர். தற்போது வலைதளங்களில் https://www.pudhumaipenn.tn.gov.in முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

    சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக வருகிற 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பதிவு செய்யலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

    மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்விப் படிக்கும் நிறுவனங்களில் வருகிற 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை, மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 2, 3, 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற்கட்டத்தில் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நேரத்தில் 9150056809, 9150056805, 9150056801, 9150056810 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல் படிப்பு, தொழில்நுட்பப் படிப்புகளில் முதலாம் ஆண்டு படிக்கும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இத்திட்டத்திற்கான விண்ணப்பம் முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    • தலமைச்சரால் அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் துவங்கப்பட்டது.
    • அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

    அரியலூர் :

    தமிழ்நாடு முதலமைச்சரால் 5.9.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் துவங்கப்பட்டது.

    இது வரை 2, 3 மற்றும் 4 ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 866 மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள்.முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வலைத்தளத்தில் மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1 ம் தேதி முதல் 11 ம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.

    இத்திட்டதின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11 ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்போது 2,3 மற்றும் 4 ஆம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809; 91500 56805; 91500 56801 மற்றும் 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும், விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • மேல் படிப்பு தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் துவங்கப்பட்டுள்ளது
    • அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்ைட மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    தமிழ்நாடு முதலமைச்சரால் 5.9.22 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் துவங்கப்பட்டது.

    இதுவரை 2, 3 மற்றும் 4 ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித் தொகையை பெற்று பயனடைந்துள்ளார்கள். தற்போது இவ்வலைத்தளத்தில் (https://www.puthumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வலைத்தளத்தில், மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத் திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No) மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 2, 3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற்கட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9150056809, 9150056805, 9150056801 மற்றும் 9150056810 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

    மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்
    • 1,368 மாணவிகள் பயன் பெறுகின்றனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த 15 கல்லூரிகளில் உயர் கல்வி படிக்கும் 1,368 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்.

    மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி வைத்து வங்கி டெபிட் கார்டு மற்றும் வாழ்க்கை வழிகாட்டு புத்தகப் பைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 

    ×