search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில்  புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற   கல்லூரி மாணவிகளுக்கு அழைப்பு
    X

    சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற கல்லூரி மாணவிகளுக்கு அழைப்பு

    • மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.
    • இதுவரை தமிழகத்தில் 2, 3 மற்றும் 4-ஆம் ஆண்டில் பயிலும் 1.13 இலட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.

    இதுவரை தமிழகத்தில் 2, 3 மற்றும் 4-ஆம் ஆண்டில் பயிலும் 1.13 இலட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். தற்போது https://pudhumaipenn.tn.gov.in என்ற வலைத்தளத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வலைத்தளத்தில், மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டதிற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ஆம் நாள் வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும், மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக எமிஸ் எண், மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்போது 2,3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கும் சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும், விண்ணப்ப முறையினை சரியாகத் தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×