search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய ரெயில் நிலையம்"

    • இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய ரெயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்துள்ளது.
    • அடுத்தடுத்து ஆகும் செலவை கணக்கில் கொண்டு மற்ற தொகைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கிளாம்பாக்கம்:

    வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதையடுத்து கிளாம்பாக்கத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரெயில் நிலையம் அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

    முதற்கட்டமாக கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ரெயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய ரெயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், அடுத்தடுத்து ஆகும் செலவை கணக்கில் கொண்டு மற்ற தொகைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஓராண்டுக்குள் பணிகளை நிறைவு செய்யும் வகையில் இந்த வாரத்தில் ரெயில்வே வாரியம் டெண்டர் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வழக்கமாக ரெயில்வே திட்டங்களுக்கு ரெயில்வே துறை நிதி ஒதுக்கும் நிலையில், தமிழ்நாட்டிற்கான தேவை என்பதால் சிஎம்டிஏ நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கப்படுகின்றன.
    • புதிய ரெயில் நிலைய பணிகளை ஒரு வருடத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய அளவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு மாற்றாக இந்த பஸ் நிலையம் செயல்பட உள்ளது. இங்கி ருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த பகுதியில் சி.எம்.டி.ஏ. சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. விரைவில் புதிய பஸ் நிலையம் திறக்கபட உள்ளது.

    தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கு வருவதற்கு வசதியாக கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தெற்கு ரெயில்வே ஏற்றுக் கொண்டது.

    இதையடுத்து கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்காக தெற்கு ரெயில்வே ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கப்படுகின்றன. நடைமேடை அமைப்பதற்கான பணிகளை நிரந்தரமாக அமைப்பதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. இந்த புதிய ரெயில் நிலைய பணிகளை ஒரு வருடத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த ரெயில் நிலைய பணிகள் முடிந்ததும் தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கு செல்ல மின்சார ரெயிலில் ஏறி கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இறங்கி புதிய பஸ் நிலையத்துக்கு எளிதாக செல்லலாம்.

    • வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையங்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.
    • புதிய ரெயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    சென்னை வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    இங்கு ஒரே நேரத்தில் 2,285 பஸ்களை நிறுத்த முடியும். இந்த பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த மாத இறுதியில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படும். மேலும் சென்னையின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் இங்கிருந்து மாநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையங்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.

    எனவே மின்சார ரெயிலில் வரும் பயணிகள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்படும்.

    எனவே பயணிகளின் சிரமத்தை போக்க கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் நிலையம் வண்டலூர்-ஊரப்பாக்கம் இடையே அமைகிறது.

    மேலும் புதிதாக அமைய உள்ள ரெயில் நிலையத்துக்கும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கும் இடையே தண்டவாளம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை உள்ளது. எனவே புதிய ரெயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக செல்ல ஆகாய நடைபாதை அமைக்கப்படுகிறது.

    இந்த ஆகாய நடைபாதை மூலம் பயணிகள் ரெயில் நிலையத்தில் இருந்து தண்ட வாளம், ஜி.எஸ்.டி. சாலை ஆகியவற்றை எளிதாக கடந்து பஸ் நிலையத்தை அடையலாம்.

    புதிய ரெயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் உள்ள அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ரெயில் நிலையம், ஆகாய நடைபாதை அமைப்பதற்காக 5.3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது. மேலும் ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு உள்ளனர்.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியேறுவதற்கு இடையூறு இல்லாத வகையிலும், அதே நேரத்தில் பயணிகளுக்கு வசதியாகவும் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் மின்சார ரெயில் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தை அடைய முடியும்.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு தமிழக முதலமைச்சரால் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×