search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரெயில் நிலையம்- தெற்கு ரெயில்வே ஒப்பந்தம் கோரியது
    X

    கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரெயில் நிலையம்- தெற்கு ரெயில்வே ஒப்பந்தம் கோரியது

    • ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கப்படுகின்றன.
    • புதிய ரெயில் நிலைய பணிகளை ஒரு வருடத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய அளவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு மாற்றாக இந்த பஸ் நிலையம் செயல்பட உள்ளது. இங்கி ருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த பகுதியில் சி.எம்.டி.ஏ. சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. விரைவில் புதிய பஸ் நிலையம் திறக்கபட உள்ளது.

    தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கு வருவதற்கு வசதியாக கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தெற்கு ரெயில்வே ஏற்றுக் கொண்டது.

    இதையடுத்து கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்காக தெற்கு ரெயில்வே ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கப்படுகின்றன. நடைமேடை அமைப்பதற்கான பணிகளை நிரந்தரமாக அமைப்பதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. இந்த புதிய ரெயில் நிலைய பணிகளை ஒரு வருடத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த ரெயில் நிலைய பணிகள் முடிந்ததும் தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கு செல்ல மின்சார ரெயிலில் ஏறி கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இறங்கி புதிய பஸ் நிலையத்துக்கு எளிதாக செல்லலாம்.

    Next Story
    ×