search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய பஸ் நிலையத்தில்"

    • மேம்பாட்டு பணியினையும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பஸ்கள் குறித்தும் கேட்டறிந்து கட்டுமான பணியினை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தினையும் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணியினையும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனை யினை பார்வையிட்டு, அம்மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அங்கு நாள் தோறும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு மேற்கொ ள்ளப்பட்டு வரும் சிகிச்சைமுறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறி ந்தார்.

    மேலும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.64.00 கோடி மதிப்பீட்டில் 2,32,602 ச.அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தினை பார்வை யிட்டு, கட்டிடத்தினை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.43 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகியவற்றை பார்வையிட்டு, பஸ் நிலையத்தில் நடை பாதை மற்றும் இருக்கைகள் ஆகியவற்றை அமைத்து பயணாளிகள் எந்தஒரு இடையூறும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதிகள் செய்து தர அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக ஈரோடு மாநகராட்சி சம்பத் நகர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையினை பார்வையிட்டு, கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் மற்றும் பொருட்கள் சுத்தமாக உள்ளதா என்றும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்து, பதிவேடுகளில் உள்ள அளவுகளின் படி அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு மூட்டைகள் சரியாக உள்ளதா? என்பது குறித்தும், பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி சோலாரில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகிய வற்றை பார்வையிட்டார். மேலும் இப்பஸ் நிலை யத்தின் மார்க்கமாக இயக்கப்பட உள்ள பஸ்கள் குறி த்தும் கேட்டறிந்து கட்டுமான பணியினை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் இளஞ்செழியன், இணை இயக்குநர் (குடும்பநலன்) ராஜசேகர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு) சண்முகவடிவு (மாநகராட்சி) உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×