search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புடலங்காய்"

    • சேலம் மாவட்டம் பனம ரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தோட்டத்தில் 6 அடி நீளமுள்ள பெரிய புடலங்காய்.
    • 1 கிலோ ரூ.20- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு 3 அடி வரை நீளமுள்ள உள்ள புடலங்காய் விற்பனைக்கு வருவது வழக்கமாகும்.இந்த நிலையில் உழவர் சந்தைக்கு இன்று 6 அடி நீளமுள்ள பெரிய

    புடலங்காய் விற்ப னைக்கு வந்தது. சேலம்

    மாவட்டம் பனம ரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வள்ளி ( வயது 60) என்பவரின் தோட்டத்தில் இந்த புடலங்காய்கள் விளைந்துள்ளது.

    இப்போது விற்ப னைக்கு வந்துள்ள புட லங்காய்கள் நாட்டு ரக பச்சை வரி புடலங்காய்கள் ஆகும். பந்தலில் விளைவித்த புடலங்காய்கள் என்பதால் இவை வழக்கமான புடலங்காய்களை விட நீளமான அளவில் உள்ளது. மேலும் இவற்றின் சுவை மற்ற ரகங்களை விட நன்றாகவே இருக்கும். 1 கிலோ ரூ.20- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவை வழக்கமான புடலங்காய்களை காட்டிலும் நீளமாக, பெரிய அளவில் இருப்பதால் இந்த புடலங்காய்களை உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். மேலும் அவற்றின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரை சீசன் காரணமாக இவற்றின் வரத்து அதிகமாக இருக்கும். என உழவர் சந்தை வேளாண் அலுவலர் மகேந்திரன் தகவல் தெரிவித்தார்.

    • பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை கூலி என மொத்தம் ரூ.10 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர்.
    • எலுமிச்சையின் ஊடுபயிராக பந்தல் அமைத்து சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகரம், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், பூமாண்டன்வலசு, வேலம்பாளையம் ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்–பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த சாகுபடி பணிகள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகள் குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூல் தந்து கூடுதல் வருமானம் மற்றும் கூடுதல் சாகுபடி பலன் தரும் புடலங்காய் சாகுபடி செய்து உள்ளனர். வேலம்பாளையம் ஊராட்சி கிராம பகுதிகளில் விவசாயிகள் எலுமிச்சையின் ஊடுபயிராக பந்தல் அமைத்து புடலங்காய் சாகுபடி செய்து உள்ளனர்.

    இதன்படி பந்தல் அமைத்து 1 ஏக்கர் புடலங்காய் சாகுபடி செய்வதற்கு உழவு கூலி, பந்தல் அமைத்தல், அடி உரம் இடுதல், விதை ஊன்றுதல், நீர் மேலாண்மை, உர மேலாண்மை, களைக்கொல்லி பராமரித்தல், பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை கூலி என மொத்தம் ரூ.10 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர்.

    இந்த புடலங்காய் செடிகளில் பூக்கள் பூத்து பிஞ்சாக காய்த்து உள்ளன. இதுபற்றி புடலங்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-

    பொதுவாக புடலங்காய் கோடை மற்றும் மிதமான குளிர் காலத்தில் சாகுபடி செய்தாலும் பருவ கால சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் பலன் தரக்கூடியது. மேலும் புடலங்காய் குறைந்த நீர் நிர்வாகத்தில் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீரை பயன்படுத்தி ஒரு சில பகுதிகளில் எலுமிச்சையின் ஊடுபயிராக பந்தல் அமைத்து சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    புடலங்காய் பறித்து நத்தக்காடையூர், அரச்சலூர், முத்தூர், காங்கயம், சிவகிரி, கந்தசாமிபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தினசரி காய்கறி விற்பனை கடைகள் மற்றும் திருப்பூர், ஈரோடு, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு எடைக்கு ஏற்ப மொத்தமாகவும் அன்றைய நாளுக்கு ஏற்ப உரிய விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×