search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிற்படுத்தப்பட்டவர்"

    பிற்படுத்தப்பட்டவர் அர்ச்சகர் ஆனது கலைஞர் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
    தென்காசி:

    திராவிடர் கழகம் சார்பில் குற்றாலத்தில் கடந்த 2-ந்தேதி முதல் நேற்று வரை பயிற்சி பட்டறை நடைபெற்றது. 110 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இறுதிநாளான நேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்புக்காக பெரியார் தனது வாழ்நாளின் இறுதி வரை போராடினார். கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று போராடி வந்தார். இந்த போராட்டத்தின் காரணமாக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை இயற்றுவதற்கு கலைஞர் கருணாநிதி தான் முழு காரணம். அவர் உடல்நலம் தேறி வருகிறார்.

    தற்போது இந்த சட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது கலைஞருக்கு கிடைத்த வெற்றி. மதுரையில் ஒரு கோவிலில் பிற்படுத்தப்பட்ட ஒருவர் அர்ச்சகராகி உள்ளார். இதனை பாராட்டுகிறேன். மு.க.ஸ்டாலினும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளார்.

    தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் 2 ஆயிரம் பேர் மட்டுமே ஆகம விதிகளின்படி உள்ள அர்ச்சகர்களாக உள்ளனர். மற்ற அர்ச்சகர்கள் ஆகம விதிகள் அறியாதவர்கள். தற்போது அரசு நடத்தும் இதற்கான பயிற்சி பள்ளிகளில் படித்து வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களுக்கு பணி கொடுக்க வேண்டும். இதில் எந்த கட்டுப்பாடும் தேவையில்லை.

    சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலேயே கூறப்பட்டுள்ளது. எனவே இந்த பயிற்சி பள்ளிகளில் பெண்களையும் சேர்க்க வேண்டும். கோவில்களில் பெண்களும் அர்ச்சகர்களாக வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் ஜனாதிபதிக்கு அது அனுப்பப்படவில்லை. எதை கூறினாலும் தலையாட்டும் அளவுக்கு மாநில அரசு இருக்கக்கூடாது.

    தமிழக அரசின் செயல்பாடுகளில் சில நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளும்படி உள்ளன. சில நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.பிற்படுத்தப்பட்டவர் அர்ச்சகர் ஆனது கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி - கி.வீரமணி

    தென்காசி:

    பிற்படுத்தப்பட்டவர் அர்ச்சகர் ஆனது கலைஞர் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

    திராவிடர் கழகம் சார்பில் குற்றாலத்தில் கடந்த 2-ந்தேதி முதல் நேற்று வரை பயிற்சி பட்டறை நடைபெற்றது. 110 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இறுதிநாளான நேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்புக்காக பெரியார் தனது வாழ்நாளின் இறுதி வரை போராடினார். கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று போராடி வந்தார். இந்த போராட்டத்தின் காரணமாக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை இயற்றுவதற்கு கலைஞர் கருணாநிதி தான் முழு காரணம். அவர் உடல்நலம் தேறி வருகிறார்.

    தற்போது இந்த சட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது கலைஞருக்கு கிடைத்த வெற்றி. மதுரையில் ஒரு கோவிலில் பிற்படுத்தப்பட்ட ஒருவர் அர்ச்சகராகி உள்ளார். இதனை பாராட்டுகிறேன். மு.க.ஸ்டாலினும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளார்.

    தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் 2 ஆயிரம் பேர் மட்டுமே ஆகம விதிகளின்படி உள்ள அர்ச்சகர்களாக உள்ளனர். மற்ற அர்ச்சகர்கள் ஆகம விதிகள் அறியாதவர்கள். தற்போது அரசு நடத்தும் இதற்கான பயிற்சி பள்ளிகளில் படித்து வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களுக்கு பணி கொடுக்க வேண்டும். இதில் எந்த கட்டுப்பாடும் தேவையில்லை.

    சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலேயே கூறப்பட்டுள்ளது. எனவே இந்த பயிற்சி பள்ளிகளில் பெண்களையும் சேர்க்க வேண்டும். கோவில்களில் பெண்களும் அர்ச்சகர்களாக வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் ஜனாதிபதிக்கு அது அனுப்பப்படவில்லை. எதை கூறினாலும் தலையாட்டும் அளவுக்கு மாநில அரசு இருக்கக்கூடாது.

    தமிழக அரசின் செயல்பாடுகளில் சில நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளும்படி உள்ளன. சில நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×