search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கி.வீரமணி"

    • மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கை பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.
    • தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதா 3-வது முறையும் ஆட்சி அமைத்தால், இதுதான் கடைசி தேர்தல் என்கிற சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதை காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, வருகிற தேர்தல் மூலம் இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதைத்தான் மக்கள் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன.

    வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு தேர்தலில் நிற்பதற்கு கூட வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. அதனால் பிரதமர் அசாமுடன் திரும்பி வந்து விட்டார். இச்சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் மிகவும் அமைதியாக பெரிய அளவில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.


    எனது பிரசாரம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி தொடங்கி 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

    மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கை பயனுள்ளதாக ஆக்க வேண்டும். இதன் அடிப்படையில் எங்களது பிரசாரம் அமையும்.

    தமிழகத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு பிரதமர் வந்து பேசுகிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது. எனவே, தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொருளாதார கல்வி நிலையை அறியவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
    • யாருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் முடிவு.

    திருச்சி:

    திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் சமூக நீதியை நிலைநாட்டவும், மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை அறியவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மத்திய பா.ஜ.க. அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 3-ந் தேதி வரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மேற்கொள்ளும் பரப்புரையை வெற்றிகரமாக நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனைதொடர்ந்து கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக பாடுபட்ட தொழிலாளர் தலைவர் சங்கரய்யாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் தராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. கவர்னருக்கு இல்லாத அதிகாரத்தையெல்லாம் அவர் செய்து கொண்டு இருக்கிறார். யாருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் முடிவு. அதில் கவர்னர் தலையிட முடியாது.

    தற்போது கவர்னர் அவருக்கான பணியை செய்யாமல் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நிச்சயமாக கவர்னர் என்ற பதவி இருக்க வேண்டுமா? என்ற கேள்வி மறுபரிசீலனைக்கு உள்ளாகும். உடல் உறுப்பு தானம் கொடுத்தவர்களுக்குகூட அரசு மரியாதை வழங்குகிற மகத்தான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆகவே பங்காரு அடிகளாரின் மனிதநேயத்தை போற்றுவது அரசின் கடமை. ஆகவே அவருக்கு அரசு மரியாதை வழங்குவதில் தவறில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்த கவர்னரும் செய்யாத ஒரு செயலை அவர் செய்து வருகிறார்.
    • முதல்வர் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமிக்கலாம்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் மணி மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார், அறக்கட்டளை நிறுவனர் கணேசன் ஆகியோர் சிலை திறப்பு விழா மற்றும் பள்ளியின் 40 ஆம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி தலைமை அறங்காவலர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நிர்வாக அறங்காவல சிவானந்தம், நிதி அரங்கம் கர்ணன், அறங்காவலர்கள் சண்முகம், பொம்மி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் பள்ளி தாளாளர் கலியமூர்த்தி வரவேற்று பேசினார்.

    பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் சிலையை கல்யாணசுந்தரம் எம்.பி. திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்க ப்பட்டுள்ள அறக்கட்டளை யின் நிறுவனர் கணேசன் சிலையை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் முருகானந்தம் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

    10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு தேர்வில் முதல் மூன்று நிலை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் அமலா தங்கத்தாய் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அணைக்கரை கோகிலாம்பாள் கல்வி நிறுவனங்கள் தலைவர் அன்பழகன், பாபநாசம் பெனிபிட்பண்ட் தலைவர் ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் மோகன், அறங்கா வலர்கள் ஜெயராமன், குணசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் பள்ளி துணை முதல்வர் காளிதாசன் நன்றி கூறினார்.

    முன்னதாக தி.க. தலைவர் வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-

    திராவிட மாடல் அரசுக்கு போட்டி அரசாங்கத்தை கவர்னர் செய்து வருவதாக தெரிகிறது. அதன் காரணமாக தான் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். எந்த கவர்னரும் செய்யாத ஒரு செயலை அவர் செய்து வருகிறார். முதல்வரின் அதிகாரத்தில் கவர்னர் தலையிட எந்த உரிமையும் இல்லை. முதல்வர் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமிக்கலாம். அந்த உரிமையில் தலையிட கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திராவிடர் கழக மாநில பொதுக்குழுக்கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் எதிரில் உள்ள மல்லிகை அரங்கில் இன்று காலை தொடங்கியது.
    • ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

    ஈரோடு:

    திராவிடர் கழக மாநில பொதுக்குழுக்கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் எதிரில் உள்ள மல்லிகை அரங்கில் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்திற்கு செயலவை தலைவர் அறிவுக்கரசு தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் என சுமார் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

    கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர் சு.முத்துசாமி, எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மேயர் நாகரத்தினம் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில அரசுகளின் உரிமைகளை காப்பாற்ற விடாமல் முட்டுக்கட்டை போட்டால் அது மக்களை அவமதிப்பதற்கு உரிய செயல்.
    • தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மத்திய அரசு கவர்னர்களை வைத்து போட்டி அரசியல் செய்கிறது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூக நீதி. எல்லோருக்கும், எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதி. தமிழகத்தில் நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியில் ஒரு வீட்டில் 4 பெண் குழந்தைகள் இருந்தாலும் அனைவருக்கும் ரூ.1000 நிதி உதவி அளித்தது சமூக நீதி. பெண்கள் படித்தால் ஒரு குடும்பம் முன்னேறும் என சொன்னது திராவிட தத்துவம்.

    மேலும் ஆன்லைன் சூதாட்டம் குறித்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலேயே திராவிடர் கழகம் தொடர்ந்து அறிவுறுத்தியதன் விளைவாக அ.தி.மு.க.வினர் சில, பல ஓட்டைகளுடன் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினர்.

    இதனால் அந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க முடியாமல் போனது. தற்போதைய திராவிட மாடல் ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து ஓட்டை இல்லாமல் போடப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திடாமல் தமிழ்நாடு கவர்னர் காலம் தாழ்த்து வருகிறார்.

    இதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை காப்பாற்ற விடாமல் ஒன்றிய அரசு தடுக்கிறது. மாநில அரசுகளின் உரிமைகளை காப்பாற்ற விடாமல் முட்டுக்கட்டை போட்டால் அது மக்களை அவமதிப்பதற்கு உரிய செயல்.

    தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மத்திய அரசு கவர்னர்களை வைத்து போட்டி அரசியல் செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தொண்டர்கள் சித்தாந்தங்களை பின்பற்றி மாற்று சித்தாந்தம் கொண்டவர்களோடும் கலந்துரையாட வேண்டும்.
    • யார் யாருடனெல்லாம் பழகி பேச வேண்டும் என்று மிகப் பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன்.

    சென்னை:

    அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி திட்டமான தலைவா திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தொண்டர்கள் சித்தாந்தங்களை பின்பற்றி மாற்று சித்தாந்தம் கொண்டவர்களோடும் கலந்துரையாட வேண்டும். நான் எதிர்மறை சித்தாந்தம் கொண்ட தலைவர்களுடன் பழக ஆசைப்படுகிறேன். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு அருந்த ஆசைப்படுகிறேன்.

    எதிர்தரப்பு கொள்கை உடையவர்களுடன் பழகும் போது நமது மனம் திறக்கும். நான் அத்தகையோருடன் பழகினேன். அந்த தருணங்களில் எனக்குள் ஒரு கண் திறந்தது. யார் யாருடனெல்லாம் பழகி பேச வேண்டும் என்று மிகப் பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். அதில் ஒருவர் தான் கி.வீரமணி.

    நான் பா.ஜனதா தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்திக்க விரும்புவதாக கட்சிக்காரர்களிடம் கூறினேன்.

    அதை கேட்டதும் கட்சிக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பா.ஜனதா தலைவர் கம்யூனிஸ்டு தலைவரை சந்திக்கலாமா என்று தயங்கினார்கள். ஆனால் நான் நல்ல கண்ணுவை நேரில் சந்தித்து அவரது ஆசியையும் பெற்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தனித்த அரசியல் களம்.
    • தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய அளவில் இந்த தேர்தல் இருக்கும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பேரறிஞர் அண்ணா நினைவு நாளான இன்று ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி, மாநில உரிமை, சேது சமுத்திர கால்வாய் திட்டம் இதையெல்லாம் மையப்படுத்தி பிரச்சாரத்தை ஈரோட்டில் தொடங்க இருக்கின்றோம்.

    அதற்கு முன்பாக வெற்றி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இல்லத்தில் திருமகன் ஈவெரா படத்திற்கு மாலை அணிவித்தேன். ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தனித்த அரசியல் களம். ஆகவே இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி இருக்கும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும். திராவிட மாடல் ஆட்சியின் தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய அளவில் இந்த தேர்தல் இருக்கும்.

    மிகப்பெரிய அரசியல் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி இன்று அடமான பொருளாக மாறி இருக்கிறது. அதை பந்தாடிக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. அதற்கு விடை இந்த தேர்தலில் கிடைக்கும்.

    அண்ணாமலை, எடப்பாடி சந்திப்பு குறித்த கேள்விக்கு, எதுவாக இருந்தாலும் நட்ட கணக்கில் இருந்தவர்கள் மீள முடியாது. அடமான பொருள் எப்போது திரும்பி மீட்கிறார்களோ அப்போது தான் அவர்கள் எதிர்க்கட்சி என்ற தகுதியை கூட பெற முடியும். இல்லையென்றால் அதையும் இழக்க கூடிய சூழ்நிலையை இந்த தேர்தல் ஏற்படுத்தும். நாளை நடப்பதை யார் அறிவார் என்ற பாட்டு பாடக்கூடிய பரிதாப நிலையில் அ.தி.மு.க. இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×