search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியாணி ரெசிப்பி"

    • வெள்ளை மட்டன் பிரியாணியை சாப்பிட்டிருக்கிறீர்களா...?
    • பிரியாணி கமகம என்று உங்களை சாப்பிட அழைக்கும்.

    வழக்கமான சிக்கன், மட்டன் பிரியாணியை ருசித்திருப்பீர்கள், வெள்ளை மட்டன் பிரியாணியை சாப்பிட்டிருக்கிறீர்களா...? இந்த கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தாலும், சுவையில் சுண்டியிழுக்கும். இதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சீரகச் சம்பா அரிசி- 1 கிலோ

    மட்டன் (வெள்ளாட்டுக்கறி)-1 கிலோ

    வெங்காயம்- 200 கிராம்

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- 50 கிராம்

    புதினா-1 கைப்பிடி

    கொத்தமல்லி-1 கைப்பிடி

    பச்சைமிளகாய்-12

    தேங்காய்ப் பால்-1கப்

    பாதம்-50 கிராம்

    பிஸ்தா-25 கிராம்

    முந்திரி-25 கிராம்

    கசகசா-10 கிராம்

    பட்டை-2 துண்டு

    கிராம்பு-6

    சோம்பு-2 ஸ்பூன்

    ஏலக்காய்-3

    எலுமிச்சை- 1/2

    நெய்- 50

    தேங்காய் எண்ணெய்- 50 மி.லி.

    உப்பு- தேவையான அளவு

    உலர் திராட்சை - 2 ஸ்பூன்

    தயிர்- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தை கழுவி, அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை போட்டு அதனுடன் தயிர், இரண்டாக வெட்டிய பச்சைமிளகாய் 5, புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிசைந்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

    அடுத்து பாதம், பிஸ்தா, முந்திரி மற்றும் கசகசா இவற்றை சிறிது நேரம் ஊறவைத்து ஒரு மிக்சி ஜாரில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதைத்தொடர்ந்து, ஊறவைத்த மட்டன் கலவையை ஒரு குக்கரில் சேர்த்து, மட்டன் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, 4-5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    அதன்பின் குக்கரை திறந்து, அதில் அரைத்து வைத்த கலவை, தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

    அதன்பிறகு வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் வேகவைத்த மட்டனை தண்ணீர் இல்லாமல் எடுத்து இதில் சேர்த்து வதக்க வேண்டும்.

    இதைத்தொடர்ந்து இதில் தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளற வேண்டும். மட்டன் வேகவைத்த தண்ணீரையே ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் என்கின்ற அளவுக்கு ஊற்ற வேண்டும்.

    அதன் பிறகு இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதி வந்தவுடன், அரை மணி நேரம் ஊறவைத்த அரிசியை சேர்த்து, 90 சதவீதம் வெந்து வந்தவுடன் உலர் திராட்சை சேர்த்து மூடியிட்டு, 20 நிமிடம் 'தம்' போட்டு இறக்கினால், கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி கமகம என்று உங்களை சாப்பிட அழைக்கும்.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
    • கொஞ்சம் வித்தியாசமாக சேமியாவை பயன்படுத்தி பிரியாணி செய்து பார்க்கலாம்.

    பிரியாணி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சீரக சம்பா பிரியாணி, பாஸ்மதி அரிசி பிரியாணிகளை தான் நாம் சுவைத்திருப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக சேமியாவை பயன்படுத்தி பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சேமியா குலையாமல் தனித்தனியாக பொல பொல வென்று எப்படி வரும் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா -1 பாக்கெட்

    சிக்கன்- 150 கிராம்

    பெரிய வெங்காயம் -2

    தக்காளி -2

    பச்சை மிளகாய் -3

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் ஸ்பூன்

    பட்டை -1 இன்ச்

    பிரியாணி இலை -1

    கிராம்பு - 2

    ஏலக்காய் 2

    மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்

    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்

    கரம் மசாலா - கால் ஸ்பூன்

    கொத்தமல்லி புதினா -சிறிதளவு

    தயிர் -50 மில்லி

    நெய் -2 ஸ்பூன்

    எண்ணெய் -4 ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

    செய்முறை

    முதலில் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் சேமியாவை சேர்த்து அதிலே ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து 70 சதவீதம் வேகவிட வேண்டும். பின்னர் அதை தனியாக எடுத்து ஆற வைக்கவும், இப்படி வேக வைத்து ஆற வைத்தால்தான் சேமியா குலையாமலும் உதிரி உதிரியாகவும் வரும்.

    பின்னர் மீண்டும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை இவைகளையும் சேர்த்து தாளிக்கவும். பிறகு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பிறகு புதினாவும் கொத்தமல்லியும் சேர்த்து நன்கு கிளறவும். அதன் பிறகு தக்காளியை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு தயிரையும் சேர்க்க வேண்டும்.

    அதன்பிறகு எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். சிக்கன் வெந்த பிறகு சேமியாவை சேர்த்து பட்டும் படாமல் கிளறி விட்டு, நெய் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து எடுத்து கிளறி இறக்கினால் சுவையான கம கம வென சேமியா பிரியாணி ரெடி.

     சேமியா உப்புமா என்றாலே ஒரு சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆகவே சேமியாவை வைத்து இந்த முறையில் பிரியாணி செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். நீங்களும் செய்து பார்த்து சுவைத்து பாருங்கள்.

    • பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.
    • பலாக்காய் வைத்து சுவையான பிரியாணி.

    பொதுவாகவே அனைவருக்கும் பிரியாணி என்றாலே மிகவும் பிடிக்கும். பலரும் பல விதமான சுவையில் பிரியாணி செய்து சாப்பிடுவார்கள். அந்தவகையில் அனைவரது வீட்டில் பொதுவாகவே இருக்கக்கூடிய பலாக்காய் வைத்து எப்படி சுவையான பிரியாணி செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    பேபி பலாக்காய்

    தண்ணீர்

    நெய்

    பிரிஞ்சி இலை

    பட்டை

    ஏலக்காய்

    கிராம்பு

    வெங்காயம்

    தக்காளி

    மஞ்சள் தூள்

    மிளகாய் தூள்

    கரம் மசாலா

    உப்பு

    தயிர்

    கொத்தமல்லி

    புதினா

    பாஸ்மதி அரிசி

    உப்பு

    செய்முறை:

    பெரிய பாத்திரத்தில் நெய் ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி எடுக்கவும். பின்னர் பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசலா தூள் மற்றும் பிரியாணிக்கு தேவையானளவு உப்பு சேர்க்கவும். அடுத்து அதில் தயிர் மற்றும் பலாக்காய் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.

    அதன்பிறகு புதினா மற்றும் கொத்தமல்லியை பிரியாணி மசாலாவில் சேர்க்க வேண்டும். பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி அது சற்று சூடான பிறகு 350 கிராம் பாஸ்மதி அரிசியை சேர்க்க வேண்டும். அடுத்து அதை வடிக்கட்டி பலாக்காய் வேக வைத்ததுடன் சேர்க்க வேண்டும். இறுதியாக மற்ற பிரியாணி செய்வது போன்று செய்ய வேண்டும். சுவையான பலாக்காய் பிரியாணி தயார்.

    ×