என் மலர்
சமையல்

நாவூறும் சுவையில் பலாக்காய் பிரியாணி
- பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.
- பலாக்காய் வைத்து சுவையான பிரியாணி.
பொதுவாகவே அனைவருக்கும் பிரியாணி என்றாலே மிகவும் பிடிக்கும். பலரும் பல விதமான சுவையில் பிரியாணி செய்து சாப்பிடுவார்கள். அந்தவகையில் அனைவரது வீட்டில் பொதுவாகவே இருக்கக்கூடிய பலாக்காய் வைத்து எப்படி சுவையான பிரியாணி செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பேபி பலாக்காய்
தண்ணீர்
நெய்
பிரிஞ்சி இலை
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
வெங்காயம்
தக்காளி
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கரம் மசாலா
உப்பு
தயிர்
கொத்தமல்லி
புதினா
பாஸ்மதி அரிசி
உப்பு
செய்முறை:
பெரிய பாத்திரத்தில் நெய் ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி எடுக்கவும். பின்னர் பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசலா தூள் மற்றும் பிரியாணிக்கு தேவையானளவு உப்பு சேர்க்கவும். அடுத்து அதில் தயிர் மற்றும் பலாக்காய் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.
அதன்பிறகு புதினா மற்றும் கொத்தமல்லியை பிரியாணி மசாலாவில் சேர்க்க வேண்டும். பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி அது சற்று சூடான பிறகு 350 கிராம் பாஸ்மதி அரிசியை சேர்க்க வேண்டும். அடுத்து அதை வடிக்கட்டி பலாக்காய் வேக வைத்ததுடன் சேர்க்க வேண்டும். இறுதியாக மற்ற பிரியாணி செய்வது போன்று செய்ய வேண்டும். சுவையான பலாக்காய் பிரியாணி தயார்.






